இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு

3/26/2023 5:18:57 PM
திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள் மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று கிளைமாக்ஸ் முதல் சாம்பியன் மகுடத்திற்கு டெல்லி-மும்பை பலப்பரீட்சை: ரூ.6 கோடி பரிசுத்தொகை யாருக்கு?

வாஷிங்டன்: வாஷிங்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தப்பியோடிய பஞ்சாப் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். மேலும், இந்தியாவுக்கு எதிராக குரல்களை எழுப்பிய அவர்கள், அங்கு ெசய்தி சேகரிக்க சென்ற இந்திய பத்திரிகையாளர் லலித் ஜா மீது திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும் அவரை அசிங்கமான முறையில் திட்டினர்.

இதுகுறித்து லலித் ஜா கூறுகையில், ‘என்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், எனது பணிக்கு பாதுகாப்பு வழங்கிய போலீசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காலிஸ்தான் ஆதரவாளர்கள் எனது இடது காதில் இரண்டு குச்சிகளால் தாக்கினர். அப்போது போலீசார் தலையீட்டால் காப்பாற்றப்பட்டேன். போராட்டக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று போலீசாரை கேட்டுக் கொண்டேன்’ என்றார். பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான பயணிக்கு ஆடியோ மிரட்டல்
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான பயணி ஒருவரின் செல்போனுக்கு மிரட்டல் ஆடியோ அழைப்பு வந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட ஆடியோ அழைப்பில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தை முற்றுகையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் தேசியக் கொடியை கீழே இறக்கி காலிஸ்தான் கொடி அங்கு ஏற்றப்படும் என்றும் அந்த ஆடியோ அழைப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து அந்த பயணி கூறுகையில்:
காலிஸ்தான் ஆதரவாளர்களிடம் இருந்து வந்த ஆடியோ அழைப்பில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக ஆட்சேபகரமான விஷயங்களை கூறினர். தப்பியோடிய அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவாக கருத்து கூறினர் என்றார். மேற்கண்ட விவகாரம் தொடர்பாக விமான நிலைய போலீசார், ஐபிசி 153, 153 ஏ மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தனிப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • நியூசிலாந்து தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை



  • கடந்த ஒரு வாரத்தில் 3வது அதிர்ச்சி; அமெரிக்காவில் மேலும் ஒரு வங்கி மூடல்?



  • சிலிக்கான் வேலி வங்கி விவகாரம்; முதலீடு பணத்தை திரும்ப பெற ஏற்பாடு: அமெரிக்க கருவூலம் அறிவிப்பு



  • தி எலிபென்ட் விஸ்பரர்ஸ், ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் இந்தியாவுக்கு 2 ஆஸ்கர் விருது: சிறந்த குறும்படம், ஒரிஜினல் பாடல் பிரிவில் சாதனை



  • வங்கிக் கணக்கில் இருந்து பெருமளவில் பணத்தை எடுத்ததால் அமெரிக்க வங்கி திடீர் மூடல்: 210 பில்லியன் டாலர் என்னாகும்? ஒரே நாளில் பங்கு வர்த்தகம் 70% வீழ்ச்சி



  • அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 4 நாடுகள்: புலனாய்வு அறிக்கையில் பரபரப்பு தகவல்



  • இஸ்ரேலில் பயங்கரம் 6 பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொலை



  • சீனா மீதான விரோத போக்கை மாற்றாவிட்டால் மோதல் நிச்சயம்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை



  • அகமதாபாத்தில் இந்திய-ஆஸி. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஆஸி. பிரதமருடன் போட்டியை ரசித்த மோடி



  • இந்தியா உடனான உறவுக்கு முன்னுரிமை: சவுதி வெளியுறவு அமைச்சர் பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com