இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தலையங்கம்

மீண்டும் இணைப்பு!

5/2/2019 3:54:23 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

மத்திய அரசு பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வற்றை இணைத்தது. கடந்த ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வந்த இந்த இணைப்பையடுத்து, நாட்டில் மூன்றாவது மிகப் பெரிய வங்கியாக, பேங்க் ஆப் பரோடா உருவெடுத்துள்ளது. இதைப் போல, வராக் கடன் சுமை, சொத்து மதிப்பு சரிவு போன்றவற்றால் தடுமாறும், மேலும் சில வங்கிகளை இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த, ஒரு சில வங்கிகளுக்கு, இணைப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்க, மத்திய அரசு விரைவில் அழைப்பு விடுக்கும் என, தெரிகிறது. அந்த வங்கிகளில், பஞ்சாப் நேஷனல் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா ஆகியவை இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

வங்கிகள், நிதி ஆதாரத்தை பெருக்கி, வராக் கடனை குறைத்து, சொத்து மதிப்பை உயர்த்தும் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும். அவ்வாறு செய்யாத வங்கிகளுக்காக, நிதியமைச்சகம் முடிவு எதுவும் எடுக்காமல் காத்திருக்காது.பொதுத் துறை வங்கிகள், அவற்றின் நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்தால், மாற்று செயல் திட்ட குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இணைப்பு நடவடிக்கை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் நடக்கும் என தெரிகிறது. இதற்காக, பல்வேறு செயல்திட்டங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.  அதேசமயம், இந்த இணைப்பு நடவடிக்கையில், மூன்று வங்கிகள் தான் இடம் பெறும் என கூற முடியாது. அது, வங்கிகளின் நிதிநிலை அறிக்கைகளை பொறுத்து மாறும். பெரிய வங்கிகளின் நிதி நிலவரம், முதல் இரண்டு காலாண்டுகளில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என மத்திய நிதி அமைச்சக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், வங்கி இணைப்பு நடவடிக்கைக்கு இது சரியான நேரமல்ல என மத்திய அரசு அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் இருந்து, பேங்க் ஆப் இந்தியா, வெளியேறியுள்ளது. அதுபோல, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றின் நிதி நிலைமையிலும், நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், பேங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகியவையும், ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்து, கடந்த பிப்ரவரியில் வெளியே வந்துள்ளன. அதனால், இவ்வங்கிகளின் நிதிநிலமையும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், மீண்டும் பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை அவசியமில்லை.

வங்கித் துறையில், வராக் கடன் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, இணைப்பு நடவடிக்கை ஒன்றே தீர்வு என கருதக் கூடாது. மத்திய அரசு, மாற்று வழிகளையும் ஆராய வேண்டும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வற்றை இணைத்தது போல மேலும் சில வங்கிகளை இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது போகப் போகத்தான் தெரியவரும்.


மேலும் சில
  • போர் அபாயம்?



  • வெப்ப அலை!



  • உயிரை போற்றுவோம்!



  • முகமூடி கிழிப்பு!



  • தடையால் நிம்மதி!



  • தேவை நிறைவேறுமா?



  • ‘வாடகைத் தாய்’ அறிவியல்



  • ‘பெயர்’ அரசியல்



  • நவம்பர் 29, 2018 வியாழக்கிழமை பொருளாதார மீட்சி



  • சாதனை போதாது!



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com