இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

இஸ்ரேலின் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் மூலம் இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: லண்டனில் ராகுல்காந்தி உரை

3/3/2023 7:33:32 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

லண்டன்: இந்திய ஜனநாயகத்தின்  அடிப்படைக் கட்டமைப்பின் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல்காந்தி உரையாற்றினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து சென்றார். அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். ‘பிக் டேட்டா அண்ட் டெமாக்ரஸி’, ‘இந்தியா - சீனா ரிலேஷன்ஸ்’ குறித்து பேசினார். அவரது உரையில், ‘கேம்பிரிட்ஜ் ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூலின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடியது சிறந்த அனுபவமாக இருந்தது. சகிப்புத்தன்மையற்ற சமூகத்தில் கேட்கும் கலையானது மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் அது தவிர்க்க முடியாதது. இதனை இந்தியா ஒற்றுமை நடை பயணத்தின் மூலம் நாங்கள் நன்றாக உணர்ந்தோம்.

புதிய உலகை வழிநடத்த, ஜனநாயக நாடுகள் நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஜனநாயக விழுமியங்களுடன் தொடர்பில்லாத உலகத்தை நாங்கள் விரும்பவில்லை; எனவே எங்களுக்கு புதிய சிந்தனை தேவை. ஜனநாயக விழுமியங்கள் இல்லாத ஒரு உலகத்தை பார்க்கவும் முடியாது. இந்திய ஜனநாயகத்தின்  அடிப்படைக் கட்டமைப்பின் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.இஸ்ரேல் நிறுவனம் தயாரித்த உளவு மென்பொருளான ‘பெகாசஸ்’ மூலம், எனது தொலைபேசி பேச்சுகள் பதிவு  செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதனால் தொலைபேசியில் பேசும்போது கவனமாக  இருக்குமாறு என்னை உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர். நான் மட்டுமில்லை ஏராளமான அரசியல்வாதிகளின் போன்களில் ‘பெகாசஸ்’ ஊடுருவி இருந்தது’ என்று தெரிவித்துள்ளார். மேலும், தனது பேஸ்புக் பக்கத்தில் நிகழ்ச்சியில் நடந்த புகைப்படங்களையும் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.

மேலும் சில
  • காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு



  • நியூசிலாந்து தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை



  • கடந்த ஒரு வாரத்தில் 3வது அதிர்ச்சி; அமெரிக்காவில் மேலும் ஒரு வங்கி மூடல்?



  • சிலிக்கான் வேலி வங்கி விவகாரம்; முதலீடு பணத்தை திரும்ப பெற ஏற்பாடு: அமெரிக்க கருவூலம் அறிவிப்பு



  • தி எலிபென்ட் விஸ்பரர்ஸ், ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் இந்தியாவுக்கு 2 ஆஸ்கர் விருது: சிறந்த குறும்படம், ஒரிஜினல் பாடல் பிரிவில் சாதனை



  • வங்கிக் கணக்கில் இருந்து பெருமளவில் பணத்தை எடுத்ததால் அமெரிக்க வங்கி திடீர் மூடல்: 210 பில்லியன் டாலர் என்னாகும்? ஒரே நாளில் பங்கு வர்த்தகம் 70% வீழ்ச்சி



  • அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 4 நாடுகள்: புலனாய்வு அறிக்கையில் பரபரப்பு தகவல்



  • இஸ்ரேலில் பயங்கரம் 6 பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொலை



  • சீனா மீதான விரோத போக்கை மாற்றாவிட்டால் மோதல் நிச்சயம்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை



  • அகமதாபாத்தில் இந்திய-ஆஸி. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ஆஸி. பிரதமருடன் போட்டியை ரசித்த மோடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com