இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

ஈறுகளின் வீக்கத்தை குணப்படுத்தும் நல்லமிளகு

3/27/2017 2:26:50 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

நாட்டு மருத்துவத்தில் பக்கவிளைவில்லாத உணவையே மருந்தாக்கும் வகையில் உணவு பொருட்கள், மூலிகைகள் மற்றும் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு மருந்து தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று காரத்தன்மை கொண்டதும் தொண்டைக்கு இதமளிக்க கூடியதுமான நல்லமிளகின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். கேரளாவில் அதிகம் விளையக்கூடிய மருத்துவ குணம் கொண்ட பொருட்களில் ஒன்று நல்லமிளகு.  காரத்தன்மை கொண்ட மிளகினை அடிக்கடி உணவில் சேர்ப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஏ, சி மற்றும் பைரிடாக்சின் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. சிறிய அளவிலான இந்த மிளகு மணத்தையும், பல மருத்தவ குணங்களையும் உள்ளடக்கியுள்ளது. இதில் உள்ள சுண்ணாம்பு, இரும்பு, மெக்னீஷியம், துத்தநாகம் உள்ளிட்ட உப்புக்கள் உடல் செயல்பாட்டுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. குரல் வளத்தை தூண்டச்செய்கிறது. பாலில் கலந்து குடிப்பதால் நல்ல தூக்கத்தை தந்து உடல் களைப்பினை அகற்றுகிறது. மிளகினை பயன்படுத்தி எளிதான மருந்து தயாரிப்பது குறித்து பார்க்கலாம்.

அஜீரணம், கழிச்சலை சரிசெய்யும் சூரணம்: தேவையான பொருட்கள்: மிளகு, கசகசா வானலியில் மிளகு மற்றும் கசகசாவை வறுத்துக் கொள்ளவும். கசகசா பொரிந்ததும், பெருங்காயப்பொடி சேர்த்து பொடித்துக் கொள்ளவும். அஜீரண கோளாறு நேரங்களில், ஒரு கப் நீரில் இந்த பொடியுடன், சுவைக்கு உப்பு சேர்த்து அருந்துவதால் உடல் உபாதை சரியாகும். மிளகில் பெப்பரின் என்ற வேதிப்பொருளும், நோய் தடுப்பான் என்றழைக்கப்படும் கெரட்டீன் என்ற வேதிப்பொருளும் இருப்பதால் வாயுவை வெளித்தள்ளி உடலை சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது. கழிச்சலை தவிர்க்கிறது. செரிமானத்தை சீர்செய்கிறது. நரம்புகளை பலப்படுத்தும் மிளகு: தேவையான பொருட்கள்: மிளகு, பாதாம், பனங்கற்கண்டு வறுத்த மிளகு(1 பங்கு), பாதாம்(5 பங்கு), பனங்கற்கண்டு. மிளகு, பாதாம், பனங்கற்கண்டு ஆகிய மூன்றையும் பொடித்து வைத்துக்கொள்ளவும். தினமும் இந்த பொடியில் ஒரு தேக்கரண்டியை பாலில் கலந்து குடித்து வருவதால், நரம்புகள் பலப்படும். கை, கால் வலி சரியாகும்.

உடலுக்கு சூட்டினை தருகிறது. மனதுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. பல் வலி, ஈறுகளின் வீக்கத்துக்கு மருந்தாகும் மிளகு: தேவையான பொருட்கள்: மிளகுப்பொடி, பெருங்காயப்பொடி, உப்பு. மிளகுப்பொடி, பெருங்காயப்பொடி, உப்பு மூன்றையும் சமஅளவு எடுத்து பற்களில் பூசலாம். அதுமட்டுமல்லாது ஈறுகளில் வலி எடுக்கும்போது அவற்றின் மேல் வைத்து அழுத்தினால் சிறிது நேரத்தில் வலி குறையும். ஈறுகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுகிறது. ஈறுவீக்கங்களில் இருக்கின்ற கெட்ட நீரினை பெருங்காயம் வெளித்தள்ளி, இதமான சூழலை ஏற்படுத்துகிறது. வாரம் ஒருமுறை இந்த கலவையை பற்களுக்கு பயன்படுத்தி வருவதால் பல் சொத்தை, ஈறு வீக்கம், ரத்த கசிவு ஆகியவற்றிலிருந்து விடுபடலாம்.

மேலும் சில
  • பாலின உணர்வை தூண்டும் மல்லிகை மருத்துவம்



  • சளி, இருமலுக்கு இஞ்சி, வெற்றிலை



  • செரிமானத்தை தூண்டும் மாங்காய்



  • உடல் உஷ்ணத்தை போக்கும் மருத்துவம்



  • செரிமானத்தை தூண்டும் மருத்துவம்



  • கோடை கால பிரச்னைகளுக்கு தீர்வாகும் எலுமிச்சை



  • கோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்



  • உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி, மாங்காய்



  • வெயிலின் தாக்கத்தை போக்கும் மருத்துவம்



  • உஷ்ணத்தை தணிக்கும் தர்பூசணி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com