இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

உஷ்ணத்தை தணிக்கும் தர்பூசணி

4/5/2017 2:19:36 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கோடைகாலத்தில் விரும்பி உண்ணக்கூடிய தர்பூசணியின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.
பல்வேறு நன்மைகளை கொண்ட தர்பூசணி நீர்ச்சத்தை அதிகம் உள்ளடக்கியது. நாவறட்சி, தாகம், உடல் உஷ்ணத்தை போக்ககூடியது. நோய் நீக்கியாக விளங்கும் தர்பூசணி, புற்றுநோய் வராமல் தடுக்கிறது. வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. இதில், வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. கண்பார்வை குறைபாடுகளை களைகிறது. பார்வையை பலப்படுத்துகிறது. சிறுநீரகத்தை சீர் செய்கிறது. சிறுநீரை பெருக்கி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. எலும்புகளுக்கு பலம் தருகிறது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. தர்பூசணியை பயன்படுத்தி ரத்த அழுத்த உண்டாகும் தலைசுற்றல், மயக்கம், உடல் சோர்வை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தர்பூசணி, சீரகம், அதிமதுரம், வெல்லம்.
செய்முறை: தர்பூசணி பழச்சாறுடன் அரை ஸ்பூன் சீரகப் பொடி, அரை ஸ்பூன் அதிமதுர பொடி, வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து குடித்துவர ரத்த அழுத்தம் சமன்படும். தலைசுற்றல், மயக்கம் சரியாகும்.

தர்பூசணியை பயன்படுத்தி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தர்பூசணியின் வெள்ளை பகுதியை துண்டுகளாக்கி 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் அளவுக்கு நசுக்கிய தர்பூசணி விதை, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீரக கற்கள் கரையும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது. தர்பூசணியின் வெண் தசை பகுதியில் அதிகளவு சத்து உள்ளது. இதை சுரைக்காய் போன்று கூட்டு வைத்து சாப்பிடலாம். தர்பூசணி விதை உடலுக்கு பலம் கொடுக்கும். கிருமிகளை அழிக்க கூடிய தன்மை கொண்டது. தர்பூசணியை கொண்டு வெயில் காலத்தில் முகத்தில் ஏற்படும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

அரிசி மாவு, பாசி பயறு மாவுடன் தர்பூசணி பழச்சாறு சேர்த்து கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்துக்கு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் எண்ணெய் சுரப்பு கட்டுப்படும். குளிர்ச்சி தரும் மேல்பூச்சாக தர்பூசணி விளங்குகிறது. இது, தோலுக்கு புத்துணர்வை கொடுக்கிறது. இதனால் தோற்றப்பொலிவு ஏற்படும். உடல் எரிச்சலை தணிக்கும் தன்மை கொண்ட தர்பூசணி குடல் புண்களை ஆற்றும். தோலுக்கு பலம், மென்மை, பளபளப்பை தரக் கூடியது. இதை அடிக்கடி சாப்பிட்டுவர தலைமுடி நன்றாக வளரும். பார்வை கூர்மை பெறும். கோடைகாலத்தில் உஷ்ணத்தை தணிக்க கூடியதாக விளங்கும் தர்பூசணியை அடிக்கடி சாப்பிட்டுவர நன்மை ஏற்படும். அதிக வெயிலால் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். பழைய சோற்றில் தயிர் சேர்த்து கலந்து காலையில் சாப்பிட்டுவர உள் உறுப்புகளின் எரிச்சல் சரியாகும். இது உடலுக்கு பலம் அற்புதமான உணவாக விளங்குகிறது.

மேலும் சில
  • பாலின உணர்வை தூண்டும் மல்லிகை மருத்துவம்



  • சளி, இருமலுக்கு இஞ்சி, வெற்றிலை



  • செரிமானத்தை தூண்டும் மாங்காய்



  • உடல் உஷ்ணத்தை போக்கும் மருத்துவம்



  • செரிமானத்தை தூண்டும் மருத்துவம்



  • கோடை கால பிரச்னைகளுக்கு தீர்வாகும் எலுமிச்சை



  • கோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்



  • உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி, மாங்காய்



  • வெயிலின் தாக்கத்தை போக்கும் மருத்துவம்



  • தும்மல் பிரச்னையை போக்கும் மருத்துவம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com