இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

தும்மல் பிரச்னையை போக்கும் மருத்துவம்

4/4/2017 2:53:44 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டி உணவுப் பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத, எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தும்மலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம்.  இப்பிரச்னைக்கு பாகற் இலை, எலுமிச்சை இலை, வேப்பிலை, மஞ்சள், சாமந்தி பூ, இஞ்சி போன்றவை மருந்தாகிறது. பாகற் இலையை பயன்படுத்தி தும்மலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு கைப்பிடி அளவுக்கு பாகற் இலைகளை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தவும். பின்னர், பாகற் இலையில் நீர் ஊற்றி சுமார் 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், இலைகளை வடிகட்டி தண்ணீரை தினமும் ஒருவேளை குடித்துவர தும்மல் கட்டுப்படும். பல்வேறு நன்மைகளை கொண்டது பாகற் கொடி. இதன் காய், இலைகளில் அற்புத மருத்துவ குணங்கள் உள்ளன. இது, நோய் எதிர்ப்பு சக்தி உடையது. ஒவ்வாமை, தொற்று ஆகியவற்றால் வரும் தும்மலுக்கு மருந்தாகிறது. தலையில் நீரேற்றம், நெஞ்சக சளி போன்ற காரணங்களால் தும்மல் பிரச்னை ஏற்படுகிறது. தும்மலுக்கு சாமந்தி பூ மருந்தாகிறது. சாமந்தி பூவுடன், இஞ்சி சேர்த்து தேனீராக்கி குடிப்பதால், தும்மல் பிரச்னை சரியாகும். எலுமிச்சை இலையை பயன்படுத்தி தும்மலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: எலுமிச்சை இலை, வேப்பிலை, மஞ்சள். செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது வேப்பிலை எடுக்கவும்.

இதனுடன் எலுமிச்சை இலை, சிறிது மஞ்சள் சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து வரும் நிலையில், ஆவி பிடிப்பதால் தலைநீரேற்றம் குறைந்து தும்மல் கட்டுப்படும். இது, நெஞ்சக சளியை கரைத்து தும்மல், இருமலை போக்குவதாக அமைகிறது. விரலி மஞ்சளை பயன்படுத்தி தும்மலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தும்மல் பிரச்னை இருக்கும்போது, விரலி மஞ்சளை விளக்கின் நெருப்பில் காட்டும்போது வரும் புகையை நுகர்வதால் தும்மல் விலகும். இது, தலையில் நீரேற்றத்தை போக்கும் மருந்தாக விளங்குகிறது. அலர்ஜி, வைரஸ் தொற்றால் ஏற்படும் தும்மலை போக்குகிறது. எப்போது தும்மல் விலகிப்போகிறதோ அப்போது பல்வேறு நோய்களும் விலகி செல்கின்றன. எனவே, இதுபோன்ற எளிய மருத்துவத்தை கொண்டு தும்மல் பிரச்னையில் இருந்து விடுபடலாம். வயதானவர்களுக்கு சிறுநீரை அடக்குவதில் ஏற்படும் சிரமத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இது, வயது முதிர்வில் ஏற்படும் பிரச்னை. குறிப்பாக, பெண்களை பாதிக்கின்ற ஒன்று. இதற்கு கழற்சிக்காய் மருந்தாக விளங்கிறது. தேவையான பொருட்கள்: கழற்சிக்காய், மிளகு, பெருங்காயம். செய்முறை: ஒரு கழற்சிக்காயில் உள்ள பருப்பை பொடி செய்து எடுக்கவும். இதில், 5 மிளகு பொடித்து போடவும். இதனுடன் சிறிது பெருங்காயம் சேர்த்து அன்றாடம் இருவேளை சாப்பிட்டுவர சிறுநீரை அடக்க முடியாத பிரச்னை சரியாகும்.

மேலும் சில
  • பாலின உணர்வை தூண்டும் மல்லிகை மருத்துவம்



  • சளி, இருமலுக்கு இஞ்சி, வெற்றிலை



  • செரிமானத்தை தூண்டும் மாங்காய்



  • உடல் உஷ்ணத்தை போக்கும் மருத்துவம்



  • செரிமானத்தை தூண்டும் மருத்துவம்



  • கோடை கால பிரச்னைகளுக்கு தீர்வாகும் எலுமிச்சை



  • கோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்



  • உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி, மாங்காய்



  • வெயிலின் தாக்கத்தை போக்கும் மருத்துவம்



  • உஷ்ணத்தை தணிக்கும் தர்பூசணி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com