இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தலையங்கம்

மாயை மறைக்கிறது

4/26/2018 2:35:23 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு ‘நீட்’ தேர்வு கட்டாயமானதால், சிபிஎஸ்இ பாடத்திட்டம் மீதான மோகம், பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் அதிகரித்துள்ளது. அதரப்பழசாக இருந்த தமிழக அரசுப் பாடத்திட்டத்தை, சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்குச் சமமாக அல்லது அதற்கும் ஒரு படி மேல் சிறப்பானதாக உருவாக்கப்போவதாகக் கூறிவரும்  பள்ளிக் கல்வித்துறை, அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசுப் பாடத்திட்டத்தில், 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம் உள்பட மொழிப்பாடங்களுக்குத் தலா முதல் தாள், 2ம் தாள் என்று இரு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், சிபிஎஸ்இ தேர்வில் மொழிப்பாடங்களுக்குத் தலா ஒரு தாள் மட்டுமே உள்ளது.

தமிழக அரசுப் பாடத்திட்டத்தில் மொழிப்பாடங்களுக்கு 2 தாள்கள் இருப்பதால், தேர்வுகளின் எண்ணிக்கை கூடுகிறது. மேல்நிலைக்கல்வியில் பிரதான பாடங்கள் நான்கு. உதாரணமாக கணக்கு மற்றும் அறிவியல் பிரிவில், கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று 4 பிரதானப் பாடங்கள். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில்  மொத்தம் 8 தாள்கள் தேர்வு எழுத வேண்டும். இந்தச் சுமையை குறைக்கும் வகையில் மொழிப்பாடத்தேர்வுகளில் இரு தாளுக்கு பதிலாக ஒரே தேர்வாக நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த நடைமுறையை வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த முடிவு செய்திருக்கிறது. இதற்காக ஆசிரியர்கள், பள்ளிகள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து கருத்துருக்கள் கேட்டு பெறப்பட்டிருக்கின்றன.

இதேபோல், மேல்நிலைக்கல்வி பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் 3 பிரதானப் பாடங்களை மட்டும் பாடத்திட்டமாக வைக்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மொழிப்பாடங்களில் தேர்வுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் வரவேற்புக்குரியதுதான். அதேசமயம், மொழிப்பாடங்களின் தரத்தைக் குலைக்காமல் அது இருக்க வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் மொழிப்பாடங்கள் அவசியமற்றவை  என்று கருதும் நிலை உள்ளது. இதற்குக் காரணம், மேற்படிப்புகளில் சேர இந்தப்பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்கள் பலனில்லை என்ற எண்ணம் மேலோங்கியிருப்பதே காரணம். இதே மனநிலை, பெற்றோரிடமும் இருக்கிறது.

அதேசமயம், மொழிப்பாடங்கள்தான், மற்றப் பாடங்களில்  சிறப்பதற்கான அடிப்படை என்பதை மாணவர்களோ, பெற்றோர்களோ மறந்துவிடக்கூடாது. இது கல்வியாளர்களுக்கு நிச்சயம் புரியும். எதிலும் சிபிஎஸ்இ திட்டத்தை அப்படியே காப்பியடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  சில பாடத்திட்டங்கள் தனித்தன்மையுடன் இருக்கலாம். சமீபத்தில் வெளியான சிபிஎஸ்இ தேர்வு தமிழ்ப்பாடத் தேர்வுத்தாளில் ஏராளமான குளறுபடிகள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனால், சிபிஎஸ்இ என்ற மாயையில் தமிழக மாணவர்கள் மட்டுமல்ல; தமிழகப் பள்ளிக் கல்வித்துறையும் சிக்கிவிடக்கூடாது.

மேலும் சில
  • போர் அபாயம்?



  • வெப்ப அலை!



  • உயிரை போற்றுவோம்!



  • முகமூடி கிழிப்பு!



  • தடையால் நிம்மதி!



  • தேவை நிறைவேறுமா?



  • மீண்டும் இணைப்பு!



  • ‘வாடகைத் தாய்’ அறிவியல்



  • ‘பெயர்’ அரசியல்



  • நவம்பர் 29, 2018 வியாழக்கிழமை பொருளாதார மீட்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com