இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தலையங்கம்

திருந்தட்டும் அரசு!

5/3/2018 2:50:46 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

எண்ணமே வாழ்வு.‘தினேஷ் நல்லசிவம் எம்பிபிஎஸ், எம்டி’பிளஸ் 2 தேர்வை எழுதிவிட்டு, மருத்துவப்படிப்பில் சேர, நீட் தேர்வில் வெற்றி பெற முயற்சித்துக் கொண்டிருந்த தினேஷ் நல்லசிவத்தின் நோட்டு, புத்தகங்களில் ‘எம்பிபிஎஸ், எம்டி’ என்ற பட்டம் எப்போதும் பெயருடன் இணைந்துகொண்டிருக்கும். ஆனால், இன்று தினேஷ் இல்லை.நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த கே.ரெட்டியபட்டியைச் சேர்ந்த தினேஷ்(18), பாளையங்கோட்டை ரயில்வே பாலத்தில் தூக்கில் தொங்கினார். அவரது மருத்துவக்கனவு கருகியதற்குக் காரணம், தந்தை மாடசாமியின் குடிப்பழக்கம். தாய் சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட, சித்தப்பாக்கள் பராமரிப்பில் வளர்ந்தார்.

தம்பி, தங்கை என உடன் பிறந்தவர்கள் இருக்க, தந்தையோ ஊதாரியாகத் திரிய, தினேஷ் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஒரு வாரம் முன்பு சென்னை சென்ற தினேஷ், டீக்கடையில் வேலை செய்தார். உறவினர்கள் கண்டித்ததால், சொந்த ஊர் வந்தார். பின்னர், கயத்தார் அருகேயுள்ள பெரியம்மா வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டவர், தற்கொலை முடிவை மேற்கொண்டுள்ளார். ‘தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தாததால் தற்கொலை செய்துகொள்கிறேன். இனியாவது அவர் குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். பிரதமரும், முதல்வரும் தமிழகத்தில் மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை ஒழிப்பேன்’ என்று மரணத்திற்கு முன் தினேஷ் எழுதிவைத்த கடிதம், அனைவரையும் உருக்கியது.

அவரது மரண வாக்குமூலம், டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கல்லா கட்ட நினைக்கும் தமிழக அரசுக்குச் சாட்டையடி. ‘இனிமேல் மதுவைத் தொட மாட்டேன்’ என்று சத்தியம் செய்திருக்கிறார் அவரது தந்தை. ஆனால், சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்பால் 1300 டாஸ்மாக் கடைகள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டதால், தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்திருக்கிறது தமிழக அரசு. மது அரசுக்கு வருவாயை அள்ளித்தருகிறது. உண்மையாக இருக்கலாம். ஆனால், சமூகத்தைத் தொடர்ந்து கெடுத்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களை மது அழித்து வருகிறது என்றால் மிகையில்லை. பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. கல்வி கற்க வேண்டிய மாணவர்கள், டாஸ்மாக் கடை வாசலில் மது வாங்கத் தவம் கிடக்கின்றனர்.

‘மதுவை ஒழித்துவிட்டால் பிற மாநிலங்களில் இருந்து சாராயம் வருவதும், கள்ளச்சாராயப் புழக்கமும் அதிகரிக்கும்’ என்று அமைச்சர் சொல்கிறார். அதைத் தடுக்க வேண்டியதும் அரசின் கடமைதானே! மதுக்கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என்பதைக் கொள்கை முடிவாகக் கொண்டு, பெயரளவுக்கு மதுக்கடைகளை மூடிவிட்டு, மதுவில் இருந்து மாநில வருவாயை அதிகரிக்க முயற்சிப்பது அரசின் தவறான நடவடிக்கை. இது தொடர்ந்தால் தினேஷ் போன்றவர்கள் ஆவியாக வந்து பயமுறுத்துகிறார்களோ... இல்லையோ... குடியால் சீரழிந்து உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் இந்த அரசை மன்னிக்காது! திருந்தட்டும் அரசு!

மேலும் சில
  • போர் அபாயம்?



  • வெப்ப அலை!



  • உயிரை போற்றுவோம்!



  • முகமூடி கிழிப்பு!



  • தடையால் நிம்மதி!



  • தேவை நிறைவேறுமா?



  • மீண்டும் இணைப்பு!



  • ‘வாடகைத் தாய்’ அறிவியல்



  • ‘பெயர்’ அரசியல்



  • நவம்பர் 29, 2018 வியாழக்கிழமை பொருளாதார மீட்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com