இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தலையங்கம்

கலைப்பொக்கிஷங்கள்

5/31/2018 4:26:12 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

தஞ்சை பெரிய கோயில் (பிரகதீஸ்வரர் ஆலயம்) என்றாலே பிரமாண்டம். 1004ல் துவங்கி 1010க்குள் ஆறே ஆண்டுகளில், கட்டிடக் கலையில் இன்றளவும் விஞ்சி நிற்கும் இக்கோயிலை, ராஜராஜ சோழன் கட்டி முடித்தான். 216 அடி உயரத்தில் அமைந்த இக்கோயில் விமானம் தமிழகத்திலேயே உயரமானது. அதன் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் 80 டன் எடையுள்ளது. அதை விமானத்தின் உச்சிக்கு எப்படிக் கொண்டு சென்றனர் என்பதே இன்றளவும் வியப்பாக உள்ளது. மூலவர் பிரகதீஸ்வரர். சிவலிங்க பாணத்தின் உயரம் 12.5 அடி. சுற்றளவு 23 அடி. இங்குள்ள மகா நந்தி சிலை 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 9 அடி அகலம், 25 டன் எடை உள்ளது.

கோயிலுக்கு ராஜ ராஜ சோழன் 66 தெய்வத் திருமேனிகளை(சிலைகள்) நன்கொடையாக வழங்கினான். கல்வெட்டுகளில் இதுகுறித்த குறிப்புகள் தெளிவாகக் காணப்படுகின்றன. இவற்றில் மன்னர் ராஜராஜன்(உயரம் 75 செ.மீ), ராணி(பட்டத்தரசி) லோகமாதேவி(55 செமீ) உள்பட 13 பஞ்சலோகச் சிலைகள் மதிப்பு வாய்ந்தவை. ராஜராஜசோழன் சிலையின் இன்றைய மதிப்பு ரூ.100 கோடி; ேலாகமாதேவி சிலையின் மதிப்பு ரூ.50 கோடி. இவை கோயில் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்தன. 50 ஆண்டுகள் முன்பு, இவை கொள்ளையடிக்கப்பட்டன. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தும் இவை எங்கிருக்கின்றன என்ற மர்மம் விலகவில்லை. தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரித்து ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்புப்புலனாய்வுக்குழு அமைக்க உத்தரவிட்டது. இந்தக்குழுவினர் பல்வேறு சிலைகளை மீட்டெடுத்ததோடு குற்றவாளிகளையும் கைது செய்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ்பகதூர் சீனிவாசக் கோபாலாச்சாரி மூலம் சென்னையைச் சேர்ந்த கவுதம் சாராபாய் என்பவருக்கு பல கோடி ரூபாய்க்கு ராஜராஜன், லோகமாதேவி சிலைகள் விற்கப்பட்டதையும், பிறகு 2 சிலைகளும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேசன் காலிகோ மியூசியத்தில் வைக்கப்பட்டிருப்பதையும் இக்குழுவினர் கண்டறிந்தனர். இதையடுத்து, ஆதாரங்கள், பட்டயக்குறிப்புகளைக் காட்டி, பொன்மாணிக்கவேல் இந்த 2 சிலைகளையும் மீட்டிருக்கிறார். இந்த சிலைகளைக் கும்பகோணம் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரும் போது, பெருமளவில் திரண்டு பொதுமக்கள் வரவேற்க இருக்கின்றனர்.

சிலைக் கடத்தல் மற்றும் முறைகேடுகளில் தொடர்புடையவர்களைச் சிலைக் கடத்தல் தடுப்புச் சிறப்புப் புலனாய்வுக்குழு கண்டறிந்து வருகிறது. இக்குழு சுதந்திரமாகச் செயல்படுவதற்கு நீதிமன்றத்தின் ஒத்துழைப்பு கிடைத்திருப்பதால், அரசியல் தலையீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன. இதனால், குற்றவாளிகளைக் கண்டறிவதையும், சிலைகளை மீட்டெடுப்பதையும் முழுவீச்சில் இக்குழு மேற்கொள்ள முடிகிறது. இதுதொடர்ந்தால், பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வருவதோடு, கொள்ளையடிக்கப்பட்ட விலைமதிப்பில்லாத பல சிலைகளை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பு உருவாகும். தமிழகத்தின் கலைப்பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படும்.

மேலும் சில
  • போர் அபாயம்?



  • வெப்ப அலை!



  • உயிரை போற்றுவோம்!



  • முகமூடி கிழிப்பு!



  • தடையால் நிம்மதி!



  • தேவை நிறைவேறுமா?



  • மீண்டும் இணைப்பு!



  • ‘வாடகைத் தாய்’ அறிவியல்



  • ‘பெயர்’ அரசியல்



  • நவம்பர் 29, 2018 வியாழக்கிழமை பொருளாதார மீட்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com