இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தலையங்கம்

இன்ஜினியரிங்கில் சாதிக்கலாம்!

6/3/2018 2:53:25 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

குழந்தை பிறக்கும்போதே இன்ஜினியரா, டாக்டரா என்று கேள்வி கேட்பவர்கள் இனி இருக்க மாட்டார்கள். காரணம், வீட்டுக்கு வீடு இன்ஜினியர்கள் இப்போதே இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் வேலை பார்ப்பவர்களாகவோ, சுய தொழில் புரிபவர்களாகவோ இருக்கிறார்களா என்றால் இல்லை. மற்றத் துறைகளில் இருப்பவர்களைப் போன்றே வேலைக்காக காத்திருப்பவர்களாக இவர்களில் பலர் இருக்கின்றனர்.
இருப்பினும் இன்ஜினியரிங் படிப்பின் மீதான மோகம் குறைந்திருக்கிறது என்று கூறுவது மேலோட்டமான கண்ணோட்டமே. சிறந்த இன்ஜினியர்களுக்கு வாய்ப்புகள் இன்னும் காத்துக்ெகாண்டிருக்கின்றன. படித்தால் மட்டும் போதாது; அனுபவப் பயன்பாடும் அவசியமாக இருக்கிறது.

தமிழகம் முழுவதும் 564 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. பி.இ. பி.டெக் படிப்புகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கு 65 சதவீதமும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 35 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்ஜினியரிங் படிப்பில் சேர விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு இன்ஜினியரிங் படிப்பில் சேர 1.41 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இந்த முறை விண்ணப்பித்தவர்கள் அதிகரித்திருக்கின்றனர். இந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் கவுன்சலிங் அறிமுகமாகிறது. கவுன்சலிங் தேதி இனிமேல்தான் அறிவிக்கப்படும். அதேசமயம் சான்றிதழ் சரிபார்ப்புத் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் இடம் கிடைப்பது நிச்சயம். அதேசமயம் விண்ணப்பித்த அனைவரும், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வார்களா என்பதும் சந்தேகமே.

குறிப்பாக விண்ணப்பித்தவர்களில் 70 சதவீதத்தினரே படிப்பில் சேரக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. மருத்துவக்கல்விக்கு எப்படி அவசியமாக இருக்கிறதோ, அதைப்போன்றே இன்ஜினியரிங் படிப்புக்கும் இனி தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. கட் ஆப் மதிப்பெண் குறைந்திருப்பதால், விரும்பிய கல்லூரிகளிலேயே விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும் என்ற கருத்து மாணவர்களிடம் நிலவுகிறது. மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்காவிட்டால், இன்ஜினியரிங் சேரலாம் என்ற எண்ணமும் அவர்களிடம் இருக்கிறது. இதனால்தான் இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இருப்பினும், தரம் வாய்ந்த இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்வதற்கு இந்த முறையும் கடும் போட்டி நிலவும் என்பது உறுதி. தேசிய அளவிலான நுழைவுத்தேர்வில் பங்கேற்காமல், கல்லூரியில் சேர்வதற்கான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் இருக்கின்றனர். மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகச் சேராமல்,  தங்களுக்குப் பிடித்த துறை, சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ள பாடப்பிரிவுகளில் சேர்வதுதான் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பதற்கான வழி. அதற்காக, கல்வியாளர்களின் ஆலோசனைகளைக் கேட்பதில் தவறில்லை.

மேலும் சில
  • போர் அபாயம்?



  • வெப்ப அலை!



  • உயிரை போற்றுவோம்!



  • முகமூடி கிழிப்பு!



  • தடையால் நிம்மதி!



  • தேவை நிறைவேறுமா?



  • மீண்டும் இணைப்பு!



  • ‘வாடகைத் தாய்’ அறிவியல்



  • ‘பெயர்’ அரசியல்



  • நவம்பர் 29, 2018 வியாழக்கிழமை பொருளாதார மீட்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com