இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தலையங்கம்

உடல் உறுப்பு தான மோசடி

6/14/2018 2:43:35 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் அசோகன் - புஷ்பாஞ்சலி தம்பதியரின் மகன் ஹிதேந்திரன். விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இது நடந்தது 2008ல். இதன் பிறகு, தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது.
சில ஆண்டுகளில் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது. இறந்த பின்னரும் ஒருவரின் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்குப் பயன்படுவதால், இறந்தவர் உயிருடன் வாழ்வதாகவே உறவினர்களும், நண்பர்களும் நெகிழ்ந்தனர். உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி என்ற பெருமையைப் பெற்றது. உடல் உறுப்பு தானம் செய்ய பலர் தாங்களாக முன்வந்து பதிவு செய்தனர். இவையெல்லாம் வரவேற்கக்கூடியவை. ஆனால், இதன் பின்னணியில் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுவதும், விதிமீறல்கள் நடப்பதும் தற்போது அம்பலமாகியுள்ளன. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மூளைச்சாவுக்கு உள்ளாகும் நபர்களிடம் இருந்து உறுப்புகளைத் தானம் பெற்று உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ெசய்யப்பட்டதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன. குறிப்பாக, உடல் மாற்று அறுவைசிகிச்சை மூலம் பயன்பெற்றோரில் பலர், வெளிநாட்டுப் பணக்கார நோயாளிகளே.
கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளுக்குக் கடும் கிராக்கி நிலவுகிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் லட்சக்கணக்கில் விலை. விபத்தில் தலையில் அடிபட்டு உயிருக்குப் போராடுபவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு மூளைச்சாவு அடைந்துவிட்டால் போதும். அடுத்த கணமே, உடல் உறுப்புகளுக்காக காத்திருப்போர் எந்த மருத்துவமனையில் உள்ளார் உள்ளிட்ட விவரங்கள் கிடைத்துவிடுகிறது. இதன் பின்னணியில் செயல்படும் ஒரு பெரிய வலைப்பின்னல், உறுப்புகளுக்கான விலை பேரத்தைத் துவங்கிவிடும்.

இதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைப்பும், அரசும் உரிய முறையில் செயல்படாததால், உடல் உறுப்பு தானம், உயிர் காப்பதை அடிப்படையாகக் கொள்ளாமல் வர்த்தக நோக்கில் முழுமையாக மாறியிருப்பதைத் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியவில்லை. ஒரு மருத்துவமனையில் நடைபெறும் உறுப்பு தான அறுவை சிகிச்சை, மூளைச்சாவு அடைந்தவர்கள் குறித்த விவரம் போன்றவற்றையும், அவை உரிய முறையில் நடக்கிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும்.  தனியார் மருத்துவமனைகளைத் தவிர, அரசு சிறப்புப் பன்னோக்கு மருத்துவமனையில் மட்டுமே உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் நடைபெறுகின்றன. மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இவற்றை மேற்ெகாள்ள வசதிகள் இல்லை. அதற்குரிய கட்டமைப்பு வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்ைச பெறும் சாதாரண ஏழை, எளிய மக்கள் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற முடியும்.

மேலும் சில
  • போர் அபாயம்?



  • வெப்ப அலை!



  • உயிரை போற்றுவோம்!



  • முகமூடி கிழிப்பு!



  • தடையால் நிம்மதி!



  • தேவை நிறைவேறுமா?



  • மீண்டும் இணைப்பு!



  • ‘வாடகைத் தாய்’ அறிவியல்



  • ‘பெயர்’ அரசியல்



  • நவம்பர் 29, 2018 வியாழக்கிழமை பொருளாதார மீட்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com