இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தலையங்கம்

மனிதாபிமான இதயங்கள்

8/21/2018 3:46:12 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

சஜிதா ஜாபில்(25), நிறை மாதக் கர்ப்பிணி. கேரள மாநிலம் அலுவா அருகே செங்கமநாட் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முதல் மாடி வெள்ளத்தால் மூழ்கியிருக்கிறது. பிரசவ வலியால் துடித்த சஜிதா, மொட்டை மாடிக்கு வருகிறார். தகவலறிந்து அங்கு வந்த கடற்படையினர் ஹெலிகாப்டரில் டாக்டரை அழைத்து வந்து பரிசோதிக்கின்றனர். சஜிதாவை ஹெலிகாப்டரில் ஏற்றி கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த அரை மணி நேரத்தில் ஆண் குழந்தை பிறக்கிறது. கடற்படையினருக்கு நன்றி சொல்லும் வகையில், மொட்டை மாடியின் தளத்தில் ‘நன்றி’ என்ற வார்த்தை தற்போது பளிச்சிடுகிறது. சாலக்குடியில் வீட்டு மொட்டை மாடியில் ஹெலிகாப்டரை இறக்கி 26 பேரின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார் விமானப்படை பைலட் ராஜ்குமார். அவருக்கு சல்யூட்! இதேபோல், வெள்ளத்தில் சிக்கிய பெண்களை, தனது முதுகை வளைத்து படகில் ஏற்றிய இளைஞன் அனைவரின் உள்ளத்திலும் சிகரமாக உயர்ந்து நிற்கிறார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த சிறுமி அனுப்பிரியா(8), சைக்கிள் வாங்குவதற்காக 4 உண்டியல்களில் 4 ஆண்டுகளாக தந்தை வழங்கிய காசுகளைச் சேர்த்து வைத்திருந்தார். கேரள மக்களுக்கு உதவ தான் சேர்த்து வைத்த ரூ.8246ஐ, தந்தையின் சம்மதத்தோடு அனுப்பிவைத்தார். கனவை விட கருணை பெரிதெனக் கருதிய சிறுமிக்கு ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் இலவசமாக சைக்கிள் வழங்கியிருக்கிறது. திருச்சியில் பார்வையற்றோர் இணைந்து ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள போர்வை, வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை கேரளாவுக்கு வழங்கியிருக்கின்றனர். பார்வையற்றோரின் இந்தச் சேவை, மற்றவர்களைக் கண்கலங்க வைத்திருக்கிறது.
பையனூரைச் சேர்ந்த சங்கரின் மகள் ஸ்வாகா(18), மகன் பிரம்மா(16) ஆகியோரது பெயரில் குடும்பச் சொத்தாக ஒரு ஏக்கர் நிலம்(மதிப்பு ரூ.50 லட்சம்) எழுதி வைக்கப்பட்டிருந்தது.

இவர்கள் படிக்கும் பள்ளியில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் அதிகாரிகளிடம், இந்த நிலத்தை நிவாரணப்பணிக்காக வழங்குவதாக ஸ்வாகாவும், பிரம்மாவும் அறிவிக்க, அனைவரிடம் வியப்பு! நூற்றாண்டு காணாத கடும் வெள்ளத்தால் கேரள மக்கள் படும் துயரங்களைக் கண்டு தேசமே கலங்கி நிற்கிறது. உதவிகள் குவிகின்றன. இனம், மதம், மொழி கடந்து, கட்சி பேதம் தவிர்த்து ஒன்றுபட்டிருக்கிறார்கள் மக்கள். ‘உணவு, உடைகளைக் காட்டிலும் கேரள மக்கள் மறுவாழ்வுக்கு எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள், கார்பென்டர்கள் என ஏராளமானோர் ேதவைப்படுவர்’ என்கிறார் மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ். கேரள வெள்ளத்தை அதிதீவிர இயற்கைப்பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இது வரவேற்புக்குரியது. கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்தாலும், மனிதாபிமானமுள்ள இதயங்களே கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டைகள் என்பது கேரள வெள்ளத்திலும் நிரூபணமாகியிருக்கிறது!


மேலும் சில
  • போர் அபாயம்?



  • வெப்ப அலை!



  • உயிரை போற்றுவோம்!



  • முகமூடி கிழிப்பு!



  • தடையால் நிம்மதி!



  • தேவை நிறைவேறுமா?



  • மீண்டும் இணைப்பு!



  • ‘வாடகைத் தாய்’ அறிவியல்



  • ‘பெயர்’ அரசியல்



  • நவம்பர் 29, 2018 வியாழக்கிழமை பொருளாதார மீட்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com