இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

கல்வி

பணிவாய்ப்பை எளிதில் தட்டி செல்ல உதவும் நூலக படிப்புகள்

2/29/2012 12:51:10 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

கல்வியில் நாடு தன்னிறைவை அடைய கிராமங்கள் தோறும் நூலகம் திறப்பது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. நூலகர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இளநிலை படிப்பை படித்து விட்டு வேறு ஏதாவது தொழில்கல்வி படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று யோசிப்பவர்களுக்கு நூலகம் மற்றும் அறிவியல் படிப்பு சற்று மாறுபட்டதாகவே இருக்கும். எம்எல்ஐஎஸ்சி எனப்படும் நூலகவியல் படிப்பை முடித்தால் நூலகராக பணியாற்றலாம். ஏற்கனவே பல பல்கலைக்கழகங்கள் நேரடியாகவும், தொலைநெறியிலும் நூலகம் சார்ந்த இளநிலை, முதுகலை மற்றும் சான்றிதழ் படிப்புகளை அளித்து வருகின்றன. குறிப்பாக தொலைநெறியில் படிப்புகளை தேர்வு செய்பவர்கள் நூலக படிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இப்படிப்பை முடித்தவர்கள் வேலைவாய்ப்பை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள், அரசு நூலகங்களில் வேலைவாய்ப்புகளை பெறலாம்.

பிஎல்ஐஎஸ்சி படிப்பை மேற்கொள்ள பிகாம், பிஏ, பிஎஸ்சி, பிபிஏ உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு இளநிலைப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பெரும்பாலும் மாணவர்கள் கலை அறிவியல் பட்டப்படிப்பை படித்து, ஏதேனும் ஒரு முதுநிலை அல்லது ஆசிரியர் படிப்பான பிஎட் முடித்து அதன் பிறகு போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்ட பிறகுதான் வேலைக்கு செல்ல முடியும். ஆனால் இந்த படிப்பை படித்து முடிக்கும் போதே அதற்கான வேலைவாய்ப்பும் காத்திருக்கிறது.  காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பிஎல்ஐஎஸ்சி மற்றும் எம்எல்ஐஎஸ்சி போன்ற படிப்புகள் வழங்கப்படுகிறது.  தமிழகத்தை பொறுத்தவரை எண்ணற்ற நூலகர் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. தனியார் நூலகத்தில் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், சமூக அறிவியல் ஆய்வு மையங்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே இப்படிப்பை தேர்வு செய்வதன் மூலம் வேலைவாய்ப்புகளை எளிதில் பெறும்  வாய்ப்பு  உள்ளது.

மேலும் சில
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு



  • பொன்னேரி நூலக வார விழா



  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு



  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்



  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?



  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்



  • வேலம்மாள் பன்னாட்டு பள்ளி மாணவிகள் பரத நாட்டியம் அரங்கேற்றம்



  • பனிமலர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்



  • ஸ்ரீசாஸ்தா கல்வி குழுமம் சார்பில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி



  • ஆசிரியர் இல்லாவிட்டால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் புதிய திட்டம் தொடக்கம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com