இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

ஆன்மீகம்

ஆண்டாள் கோயிலில் மார்கழி கொண்டாட்டம்

12/22/2016 5:59:48 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

அரங்கனை மணமுடிக்க, திருப்பாவை பாடி ஆண்டாள் விரதமிருந்த மாதம் மார்கழி. எனவே விருதுநகர் மாவட்டம்  திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி உற்சவம் களை கட்டுகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் பிறக்கும்  நேரத்தில், நள்ளிரவிலும் ஆண்டாள் கோயிலின் நடை திறக்கப்பட்டு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.  கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்திருந்து, ஆண்டாள் மற்றும் ஸ்ரீரெங்கமன்னாரை தரிசித்து செல்வர். மாதங்களில் நான் மார்கழி என கீதையில் கண்ணன் அருளியதால், நோன்பிருக்க இந்த மாதத்தை தேர்ந்தெடுத்தார் கோதை  நாச்சியார் என்கின்றனர் திருவில்லிபுத்தூர் மக்கள். மார்கழி முழுவதும தினமும் அதிகாலை எழுந்து நீராடி, அரங்கனைப் பாடி,  அவரையே மணாளனாக அடைந்தாள் ஆண்டாள்.

ஆண்டாள் முன்பு அம்மானை விளையாட்டு, பஞ்சாங்கம் படித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தினமும் அதிகாலை  நடை திறக்கபட்டு விஸ்வரூபம், திருப்பள்ளி எழுச்சி, திருப்பல்லாண்டு, திருப்பாவை பாடப்படுகிறது. வரும் 29ம் தேதி,  ஆண்டாள் பிறந்த வீட்டிற்கு வரும் வைபவம் நடைபெறும். இதற்காக கோயிலில் ஆண்டாள் வசித்த வீட்டில் பச்சை  காய்கறிகளை பரப்பி வைப்பார்கள். பகல் பத்து, ராப்பத்து மற்றும் எண்ணெய் காப்பு உற்சவம் என கொண்டாட்டங்கள் தொடரும்.  ராப்பத்து முடிந்த பின்னர் பிரியாவிடை நிகழச்சி நடைபெறும். தான் பாவை நோன்பு இருக்கப் போகிறேன் என  பெரிய  பெருமாளிடம் வேண்டிக் கொண்டு புறப்படுகிறார் ஆண்டாள் என்பது ஐதீகம்.

கோயிலில் ஆண்டாள் நோன்பிருந்த மண்டபத்தில் எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெறும். 64 அரிய வகை  மூலிகைகளை  கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெயில் 8 நாட்கள் நீராட்டு நிகழச்சி நடைபெறும். இந்த நாட்களில் ஆண்டாள் பல்வேறு சிறப்பு  அலங்காரங்களில் காட்சி அளிப்பார். தங்க சீப்பில் தலைவாரி, மதிப்பு மிக்க ஆபரணங்களை அணிந்து காட்சியளிப்பார்.  
தனது அலங்காரத்தை ஆண்டாள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அர்ச்சர்கள் கண்ணாடியை அவர் முன்பு இன்றும்  காட்டுகின்றனர். கடவுளை அடைய கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம், பக்தியோகம் என பல வழிகள் இருந்தாலும், பக்தி  யோகமே சிறந்தது என்பதை உணர்த்தும் மாதம் இது. பக்தியில் மூழ்கி, அதிலேயே திளைத்து, கடவுளை அடைந்தார் ஆண்டாள்  என்ற தத்துவத்தை உணர்த்தும் மாதம் மார்கழி.

மேலும் சில
  • இன்று ராகு-கேது பெயர்ச்சி விழா: திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் சிறப்பு வழிபாடு



  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை துவக்கம் 9ல் தேரோட்டம்



  • சோலார் மின் உற்பத்தி: மாதம் ரூ. 30,000 மிச்சம் ஸ்ரீரங்கம் கோயில் அசத்தல்



  • மணலி புதுநகரில் வைகுண்டசாமி ஆனி திருவிழா



  • பெரியபாளையம் அருகே செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்



  • நரசிம்ம பெருமாள் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்



  • திருப்போரூர் அருகே திரவுபதி அம்மன் கோயில் தீ மிதி விழா



  • ஸ்ரீரங்கம் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் தங்கக்குடத்தில் புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலம்



  • பெரம்பலூர் அருகே அரவானுக்கு ரத்தசோறு படையல் பக்தர்கள் குவிந்தனர்



  • மாங்கனி திருவிழா காரைக்கால் அம்மையார் இறைவனோடு ஐக்கியம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com