இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

ஆன்மீகம்

பெரம்பலூர் அருகே அரவானுக்கு ரத்தசோறு படையல் பக்தர்கள் குவிந்தனர்

6/20/2016 2:47:13 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

பெரம்பலூர்; ராமாயண காலத்தில் சீதையைத்தேடி தென்திசை நோக்கிச்சென்ற ராமன் வானர நண்பன் சுக்ரீவனுக்காக வாலியை வதம் செய்த பகுதி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாலிகண்டபுரம் என்று கூறப்படுகிறது. வாலி சிவனை வழிபட்டதால் இங்குள்ள சிவன்கோயில் வாலீஸ்வரர் கோயில் எனப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.ராமாயணத்தைப் போல் இவ்வூரில் மகாபாரதத்தில் போருக்கு முன்னால் போரில் வெற்றி பெறுவதற்காக பாண்டவர்கள் அரவானைக் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஊருக்கு வட திசையில் உள்ள திரவுபதியம்மன் கோயிலில் விமரிசையாகக் கொண்டாடப்படும்.

கடந்த 9ம் தேதி கோயிலில் காப்பு கட்டப்பட்டது. விழாவுக்கு முந்தைய 18 நாட்களும் மகாபாரத நாடகங்கள் நடந்து வந்தது. அதில் முனிக்கு சோறு ஊட்டுதல், பூவாலைக்கன்னி பூவெடுத்தல், திரவுபதி கல்யாணம், துரியோதனன், கவுரவர்கள், பாண்டவர்கள் முன்னிலையில் திரவுபதியை துகிலுரிதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் நல்லரவான் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு அப்பகுதி கிராம மக்கள் திரவுபதியம்மன் கோயிலில் கூடினர்.அங்கு 30 அடி நீளத்திற்கு படுத்திருக்கும் நிலையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரவான் சிலையின் முன் பலி கொடுக்கப்பட்ட ரத்த சோறு படைக்கப்பட்டது.

அந்த ரத்தசோற்றை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து காத்திருந்த, குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், திருமணமாகாத பெண்கள் பக்தியுடன் வாங்கி சாப்பிட்டனர். தொடர்ந்து நல்லரவான் பலி கொடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.பிறகு பெண்கள் தலை கவிழ்ந்து காத்திருக்க அவர்களின் தலையில் காளி முறத்தால் அடித்துப் பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.இவற்றைக் காண பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

மேலும் சில
  • இன்று ராகு-கேது பெயர்ச்சி விழா: திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் சிறப்பு வழிபாடு



  • ஆண்டாள் கோயிலில் மார்கழி கொண்டாட்டம்



  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை துவக்கம் 9ல் தேரோட்டம்



  • சோலார் மின் உற்பத்தி: மாதம் ரூ. 30,000 மிச்சம் ஸ்ரீரங்கம் கோயில் அசத்தல்



  • மணலி புதுநகரில் வைகுண்டசாமி ஆனி திருவிழா



  • பெரியபாளையம் அருகே செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்



  • நரசிம்ம பெருமாள் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்



  • திருப்போரூர் அருகே திரவுபதி அம்மன் கோயில் தீ மிதி விழா



  • ஸ்ரீரங்கம் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் தங்கக்குடத்தில் புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலம்



  • மாங்கனி திருவிழா காரைக்கால் அம்மையார் இறைவனோடு ஐக்கியம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com