இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

ஆன்மீகம்

ஸ்ரீரங்கம் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் தங்கக்குடத்தில் புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலம்

6/24/2016 2:39:50 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் இன்று நடந்தது. தங்க குடத்தில் புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பெருமாளுக்கு கடந்த 19ம்தேதி ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், இன்று ரங்கநாச்சியார் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, காவிரியாற்றிலிருந்து ஒரு தங்க குடத்தில் எடுக்கப்பட்ட புனித நீரை கோயில் யானை மீது வைத்தும், 23 வெள்ளி குடங்களில் புனித நீரை அர்ச்சகர்கள் எடுத்து கொண்டும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு சென்றடைந்தனர்.அதன்பின்னர், தாயார் சன்னதியில் உற்சவர் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. தாயார் சன்னதியில் ஸ்ரீதேவிக்கும், பூதேவிக்கும் அரிய வகை மூலிகைகளால் தைலகாப்பு பூசப்பட்டது. தாயார் சன்னதியில் நகைகள் பழுது பார்க்கப்படும் பணியும், எடை சரிபார்க்கப்பட்டும் மாலை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

இரவு 8.30 மணிக்கு தாயாருக்கு மங்கள ஹாராத்தி நடக்கிறது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி, தாயார் சன்னதியில் இன்று முழுவதும் மூலவர் சேவை இல்லை.நாளை தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பொிய தளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி, நாளை காலை 7 மணிக்கு மூலஸ்தானத்திற்கு எதிரே தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் சாதம் குவிக்கப்படும். அதில் நெய், பலாச்சுளைகள், மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் கலந்து தாயருக்கு நைவேத்தியம் செய்யப்படும். பின்னர் அன்னப்பிரசாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். மதியம் 1 மணியளவில் தாயாருக்கு மங்களஹாரத்தி நடைபெறுகிறது. அதன் பின் இன்று மாலை 4.30 மணிக்கு மேல் தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோயில் அலுவலர்கள் உள்பட பணியாளர்கள் செய்துள்ளனர்.

மேலும் சில
  • இன்று ராகு-கேது பெயர்ச்சி விழா: திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் சிறப்பு வழிபாடு



  • ஆண்டாள் கோயிலில் மார்கழி கொண்டாட்டம்



  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை துவக்கம் 9ல் தேரோட்டம்



  • சோலார் மின் உற்பத்தி: மாதம் ரூ. 30,000 மிச்சம் ஸ்ரீரங்கம் கோயில் அசத்தல்



  • மணலி புதுநகரில் வைகுண்டசாமி ஆனி திருவிழா



  • பெரியபாளையம் அருகே செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்



  • நரசிம்ம பெருமாள் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்



  • திருப்போரூர் அருகே திரவுபதி அம்மன் கோயில் தீ மிதி விழா



  • பெரம்பலூர் அருகே அரவானுக்கு ரத்தசோறு படையல் பக்தர்கள் குவிந்தனர்



  • மாங்கனி திருவிழா காரைக்கால் அம்மையார் இறைவனோடு ஐக்கியம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com