இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

அழைப்பிதழ் கொடுத்த பிறகு திருமணம் செய்ய மகன் மறுப்பு... போலீஸ் எஸ்ஐ தூக்கிட்டு சாவு

6/24/2019 3:12:06 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

ஆவடி: அழைப்பிதழ் அச்சடித்து கொடுத்தபிறகு திருமணம் செய்ய மகன் மறுத்ததால் விரக்தியடைந்த போலீஸ் எஸ்ஐ தற்கொலை செய்துகொண்டார். ஆவடி டி.ஆர்.ஆர் நகர், தனலட்சுமி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் இருதயராஜ் (59). இவர் ஓய்வுப்பெற்ற போலீஸ் எஸ்ஐ. இவரது மனைவி வியகுலமாரி (53). இவர்களது மகன் பால் மேத்யூ (27). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் 11ம் தேதி பால் மேத்யூவிற்கும் காஞ்சிபுரத்தை சார்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரு வீட்டாரும் திருமண அழைப்பிதழ்களை கொடுத்துவந்தனர்.

நேற்று காலை பால் மாத்யூ பெற்றோரிடம், ‘’தனக்கு திருமணம் வேண்டாம்’’ என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ‘’ உனது திருமணத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டோமே, திடீரென திருமணம் வேண்டாம் என்றால் அசிங்கமாக இருக்காதா, உறவினர்கள் என்ன நினைப்பார்கள்? என்று கேட்டுள்ளனர். இதன்காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு படுக்கை அறைக்கு சென்ற இருதயராஜ், கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்த மனைவி, உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில், ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • திருவள்ளூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா



  • வடபழனி காமராஜ் சிறப்பு மருத்துவமனையில் உலக ஆண்கள் தின வாரவிழா



  • பள்ளிப்பட்டில் திடீர் மழை... விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி



  • திருப்போரூர் அருகே பரபரப்பு... வெல்டிங் கடை உடைத்து கொள்ளை



  • காஞ்சி. அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காசிகுட்டை குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இளைஞர், தன்னார்வலர்கள்



  • வீடிழந்த குடும்பத்துக்கு ஜெகத்ரட்சகன் நிதியுதவி



  • தொழில் முனைபவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்



  • லாரி மோதி பால் வியாபாரி பரிதாப சாவு



  • நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா



  • எண்ணூரில் தொடரும் கொள்ளை சம்பவம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com