இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை: 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

3/23/2023 5:20:13 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

சூரத்: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ராகுல்காந்தி குற்றவாளி என 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கர்நாடக மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில், அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசும்போது, ‘எல்லா திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்ப பெயரை வைத்துள்ளனர்?’ என்று கேட்டதாக தெரிகிறது.

இதனடிப்படையில், ராகுல்காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் மேற்கு தொகுதி பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கில், ‘ஒட்டு மொத்த ‘மோடி’ சமூகத்தையும் ராகுல்காந்தி இழிவுபடுத்தி விட்டார்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு சூரத் நீதிமன்றத்தில் கடந்த 17ம் தேதி இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்தது. 23ம் தேதி, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா தீர்ப்பு அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அன்றைய தினம் ராகுல்காந்தி நீதிமன்றத்தில் ஆஜராவார் என்றும் அவரது வழக்கறிஞர் கிரித் பன்வாலா தெரிவித்தார்.

அதன்படி இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜரானார். தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தீர்ப்பை வாசித்தார். இதில், ராகுல்காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்து 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது. ராகுலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை தொடர்ந்து அவர், 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய வசதியாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நீதிமன்றத்துக்கு வெளியே காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • பிரிட்டனின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களுடன் இஸ்ரோவின் எல்விஎம். 3-எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது



  • ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்: ெடல்லி ராஜ்காட்டில் 144 தடை; போலீஸ் படை குவிப்பால் பரபரப்பு



  • கர்நாடகா சட்டசபை தேர்தல் 124 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது: மாஜி முதல்வர் வருணா தொகுதியில் போட்டி



  • அன்று தலைவர் பதவியில் இருந்து விலகல்... இன்று எம்பி பதவி தகுதி நீக்கம்: ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?



  • சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்: நாளை மறுநாள் விசாரணை



  • பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடாது: அனுராக் தாக்கூர்



  • கோலாலம்பூர் விமானத்தில் நடுவானில் மலேசிய பயணி மாரடைப்பினால் பலி



  • ஆதாருடன் வாக்காளர் எண் இணைப்பு: கால அவகாசம் ஓராண்டு நீடிப்பு



  • திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏப்ரல், ஜூன் மாத தரிசன டிக்கெட் இன்று மாலை ஆன்லைனில் வெளியீடு



  • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை: 5 பேர் கும்பல் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com