இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கோலாலம்பூர் விமானத்தில் நடுவானில் மலேசிய பயணி மாரடைப்பினால் பலி

3/23/2023 5:23:37 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

மீனம்பாக்கம்: சவுதி அரேபியா நாட்டின் ஜெட்டாவில் இருந்து மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூருக்கு, நேற்றிரவு 164 பயணிகளுடன் ஏர் ஏசியா விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் நேற்றிரவு 11.30 மணியளவில் சென்னை வான்வெளியை கடந்து சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த வஹாப் அகமது (39) என்பவர், தனது நண்பருடன் பயணித்துக் கொண்டு இருந்தார். இதற்கிடையே, அந்த விமானம் சென்னை வான்வெளியில் பறந்தபோது, நடுவானில் மலேசிய பயணி வஹாப் அகமதுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு விமான பணிப்பெண்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, விமானிக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு ஏர் ஏசியா விமானி தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அந்த விமானப் பயணியின் அவசர மருத்துவ உதவிக்காக சென்னை விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்க தலைமை விமானநிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி வழங்கினர். மேலும், அப்பயணிக்கு மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் நேற்று நள்ளிரவு 11.50 மணியளவில் மலேசியாவுக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு தயார்நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் சென்று மலேசிய பயணி வஹாப் அகமதுவை பரிசோதித்தனர். அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என குழுவினர் பரிந்துரைத்தனர். இதன்படி, மலேசிய பயணி வஹாப் முகமது மற்றும் அவரது நண்பருக்கு அவசரகால மருத்துவ விசாக்களை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் வழங்கினர்.

இதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்து இருவரும் கீழே இறக்கப்பட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மலேசிய பயணி வஹாப் முகமது அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், மருத்துவமனையில் இன்று அதிகாலை தீவிர சிகிச்சை பலனின்றி மலேசிய பயணி வஹாப் முகமது பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சென்னை விமானநிலைய போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் மாரடைப்பினால் பலியான மலேசிய பயணி வஹாப் முகமதுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இப்புகாரின்பேரில் சென்னை விமானநிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர், மாரடைப்பினால் இறந்த மலேசிய பயணி வஹாப் முகமதுவின் சடலத்தை சரக்கு விமானம் மூலமாக மலேசியாவுக்கு அனுப்பி வைக்க சென்னையில் உள்ள மலேசிய நாட்டு தூதரகம் மூலமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே, நடுவானில் மலேசிய பயணி வஹாப் முகமதுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை விமானநிலையத்தில் ஏர் ஏசியா விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் அந்த விமானத்தில் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, அந்த விமானம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் மீதமுள்ள 162 பயணிகளுடன் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. இதனால் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு நிலவியது.

மேலும் சில
  • பிரிட்டனின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களுடன் இஸ்ரோவின் எல்விஎம். 3-எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது



  • ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்: ெடல்லி ராஜ்காட்டில் 144 தடை; போலீஸ் படை குவிப்பால் பரபரப்பு



  • கர்நாடகா சட்டசபை தேர்தல் 124 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது: மாஜி முதல்வர் வருணா தொகுதியில் போட்டி



  • அன்று தலைவர் பதவியில் இருந்து விலகல்... இன்று எம்பி பதவி தகுதி நீக்கம்: ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?



  • சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்: நாளை மறுநாள் விசாரணை



  • பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடாது: அனுராக் தாக்கூர்



  • பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை: 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு



  • ஆதாருடன் வாக்காளர் எண் இணைப்பு: கால அவகாசம் ஓராண்டு நீடிப்பு



  • திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏப்ரல், ஜூன் மாத தரிசன டிக்கெட் இன்று மாலை ஆன்லைனில் வெளியீடு



  • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை: 5 பேர் கும்பல் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com