இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பிரிட்டனின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களுடன் இஸ்ரோவின் எல்விஎம். 3-எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது

3/26/2023 5:08:39 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

சென்னை: பிரிட்டனின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களுடன் இஸ்ரோவின் எல்.வி.எம். 3-எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் ஏவி வருகிறது. இதன்படி அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜிஎஸ்எல்வி ரகத்தில் தயாரிக்கப்பட்ட  மற்றொரு ராக்கெட்டான எல்விஎம் 3- எம்.3 ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்தது. இந்தியவிண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சொந்த செயற்கைக் கோள்களை  மட்டுமின்றி, வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோளையும் விண்ணில்  செலுத்துகிறது.

இதன்படி பிரிட்டன் நாட்டின் ஒன்வெப் நிறுவனத்தின் 72  செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கெனவே கடந்தாண்டு 36 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்தொடர்ச்சியாக மீதமுள்ள 36 செயற்கை கோள்கள் எல்விஎம் 3 - எம்3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன. அதன்படி இதற்கான இறுதிகட்டப்பணியான 24 மணி நேரம் 30 நிமிடம் கவுண்ட்டவுன் நேற்று  காலை 8.30 மணிக்கு தொடங்கியது. 36 செயற்கைகோள்களைத் தாங்கிச் செல்லும் இந்த எல்விஎம்3 - எம்3 ராக்கெட்  இஸ்ரோவின் தயாரிப்புகளில் மிக அதிக எடை கொண்டது. முன்னதாக இந்த ராக்கெட் ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3 என்று அழைக்கப்பட்டது.

இந்த ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும் 643 டன் எடையும் கொண்டது. 3 நிலைகளை  கொண்ட எல்.வி.எம்-3 ராக்கெட் 8 டன் அளவிலான எடையைச் சுமந்து செல்லும் வகையில்  வடிவமைக்கப்பட்டது. வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பில் எரிமலை செயல்பாடு குறித்து கண்டறிவதற்காக  இந்த செயற்கைகோள்கள் பயன்படும். 36 செயற்கைகோள்களின் மொத்த எடை சுமார் 5.8  டன்.  இந்த வகை ராக்கெட்டுகள் மூலம் ஏற்கெனவே 5 முறை  செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று 6வது  முறையாகவும் வெற்றிகரமாக 36 செயற்கைக்கோள்களைத் தாங்கி விண்ணில் ஏவப்பட்டது. அதேநேரம், வணிகமுறையில் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது இரண்டாவது  முறையாகும். இவ்வளவு குறுகிய கால இடைவெளிக்குள் இந்த ராக்கெட்டை விண்ணில்  செலுத்துவதும் இதுவே முதல்முறை ஆகும்.

பிரிட்டனைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின்  எல்.வி.எம். 3 - எம்3 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, சரியாக காலை 9 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கை  கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இணைய சேவை நிறுவனமான ஒன்வெப் நிறுவனமானது ஸ்பேஸ் எக்ஸ், அரியான் ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோ ஆகியவற்றின் ஏவுதல் சேவைகளை பயன்படுத்தி அதன் முதல் தலைமுறை விண்மீன் செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துகிறது.

ஒன்வெப் நிறுவனத்திற்காக 17 முறை வெவ்வேறு நிறுவனங்களால் ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதன்படி மேலும் ஒரு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது 18வது முறையாகும். 2025ம் ஆண்டில் இந்தியாவின் விண்வெளி பெருளாதாரம் சுமார் 13 பில்லியன் டாலர் (ரூ.1.07 லட்சம் கோடி) வருமானத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் செயற்கைக்கோள், ஏவுதள சேவைகளுக்கு 13 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வணிக விண்வெளி சேவைகள் ஒரு பெரிய மாற்றத்தின் உச்சத்தில் உள்ளது என்றும் செய்தி குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்: ெடல்லி ராஜ்காட்டில் 144 தடை; போலீஸ் படை குவிப்பால் பரபரப்பு



  • கர்நாடகா சட்டசபை தேர்தல் 124 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது: மாஜி முதல்வர் வருணா தொகுதியில் போட்டி



  • அன்று தலைவர் பதவியில் இருந்து விலகல்... இன்று எம்பி பதவி தகுதி நீக்கம்: ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?



  • சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்: நாளை மறுநாள் விசாரணை



  • பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடாது: அனுராக் தாக்கூர்



  • கோலாலம்பூர் விமானத்தில் நடுவானில் மலேசிய பயணி மாரடைப்பினால் பலி



  • பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை: 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு



  • ஆதாருடன் வாக்காளர் எண் இணைப்பு: கால அவகாசம் ஓராண்டு நீடிப்பு



  • திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏப்ரல், ஜூன் மாத தரிசன டிக்கெட் இன்று மாலை ஆன்லைனில் வெளியீடு



  • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை: 5 பேர் கும்பல் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com