இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

ஆன்மீகம்

பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா துவக்கம்

5/7/2016 12:25:57 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சை மாவட்டம், பூண்டியில் உள்ள மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக பூண்டிமாதா சொரூபம் சிறிய சப்பரத்தில் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப் பட்டு பக்தர்கள் இறைபாடல்களுடன் சுமந்து வர, மாதாவின் திருவுருவம் வரையப்பட்ட வண்ணக் கொடியுடன் பக்தர்கள் முன் சென்றனர். ஆயர் அந்தோணிசாமி முன்னிலையில் ஆயர் பீட்டர்ரெமிஜியுஸ் கொடியை புனிதப்படுத்தி கொடிமரத்தில் ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். அங்கு கூடியிருந்த மக்கள் ‘மாதாவே வாழ்க, பூண்டி அன்னையே வாழ்க’ என்று கோஷமிட்டனர்.இதன்பின்னர் திறந்தவெளி அரங்கத்தில் நடைபெற்ற திருப்பலி பூஜையில் ‘மரியாள் இரக்கத்தின் அன்னை’ என்ற தலைப்பில் ஆயர் பீட்டர்ரெமிஜியுஸ் மறையுரையாற்றி அருளாசி வழங்கினார். கொடியேற்றத்தை தொடர்ந்து இன்று முதல் 13ம் தேதிவரை நவநாட்கள் திருப்பலி பூஜைகளை பங்குதந்தையர்கள் நிறைவேற்றுகின்றனர்.

இறை அடியார் விழாவின் சிறப்பு அம்சமாக 14ம் தேதி மாலை 5.30 மணிக்கு பூண்டி மாதா பேராலயத்தின் முன்னாள் பங்கு தந்தை மறைந்த லூர்துசேவியர் சவரிராயனை ‘இறை அடியாராக’ (புனிதர் பட்டத்துக்கு முன்னதாக வழங்கும் பட்டம்)தமிழக ஆயர் பேரவையும், ரோம் புனிதர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்கும் ஆணையமும் வழங்கிய அறிவிப்பை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி வெளியிடுகிறார்.

தொடர்ந்து லூர்துசேவியர் மற்றும் ராயப்பர் ஆகியோரின் நினைவுத்திருப்பலி பூஜைகள் நிறைவேற்றப்படும். பின்னர் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி மாலை 6மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி பூஜையை நடத்தி ‘மரியாள் திருச்சபையின் அன்னை’ என்ற தலைப்பில் மறையுரையாற்றி ஆசி வழங்குகிறார். இரவு 9.00 மணிக்கு மாதாவின் அலங்கார, ஆடம்பர தேர்பவனியை புனிதப்படுத்தி ஆயர் அந்தோணிசாமி துவக்கி வைக்கிறார். இரவு வாணவேடிக்கைகள் நடைபெறும்.15ம் தேதி காலை 6 மணிக்கு ஆயர் தலைமையில் திருப்பலி பூஜையும், மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.

மேலும் சில
  • இன்று ராகு-கேது பெயர்ச்சி விழா: திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் சிறப்பு வழிபாடு



  • ஆண்டாள் கோயிலில் மார்கழி கொண்டாட்டம்



  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை துவக்கம் 9ல் தேரோட்டம்



  • சோலார் மின் உற்பத்தி: மாதம் ரூ. 30,000 மிச்சம் ஸ்ரீரங்கம் கோயில் அசத்தல்



  • மணலி புதுநகரில் வைகுண்டசாமி ஆனி திருவிழா



  • பெரியபாளையம் அருகே செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்



  • நரசிம்ம பெருமாள் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்



  • திருப்போரூர் அருகே திரவுபதி அம்மன் கோயில் தீ மிதி விழா



  • ஸ்ரீரங்கம் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் தங்கக்குடத்தில் புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலம்



  • பெரம்பலூர் அருகே அரவானுக்கு ரத்தசோறு படையல் பக்தர்கள் குவிந்தனர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com