இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

ஆன்மீகம்

கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் குடியாத்தத்தில் கோலாகலம்

5/14/2016 12:11:59 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி கடந்த 30ம் தேதி நடந்தது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த 10ம் தேதி கெங்கையம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை ரத உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் சிரசு ஊர்வலம் இன்று நடந்தது.

அதிகாலை 3.30 மணியளவில் குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் வீற்றிருந்த கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து 5 மணியளவில் மேளதாளம் முழங்க, பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் அம்மன் சிரசு ஊர்வலம் தொடங்கியது. வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். ஆங்காங்கே பக்தர்கள் திரண்டு தேங்காய்கள் உடைத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் பல்வேறு சுவாமி வேடங்கள் அணிந்தபடி ஊர்வலத்தில் சென்றனர்.

அதேபோல் கோலாட்டம், மயிலாட்டம், புலியாட்டம் கரகாட்டம், சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் ஊர்வலத்தில் இடம்பெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தின் இடையே அம்மன் சிரசு ஊர்வலம் நீலிகோதண்டசெட்டி தெரு, காந்திரோடு, ஜவஹர்லால் நேரு தெரு, போடிபேட்டை வழியாக கோபாலபுரத்தில் உள்ள கங்கையம்மன் கோயிலை வந்தடைந்தது. அங்கு அலங்கரிக்கப்பட்ட சண்டாளச்சி உடலில் சிரசு பொருத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மனுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, அணைக்கட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து குடியாத்தத்திற்கு 40க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

மேலும் சில
  • இன்று ராகு-கேது பெயர்ச்சி விழா: திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் சிறப்பு வழிபாடு



  • ஆண்டாள் கோயிலில் மார்கழி கொண்டாட்டம்



  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை துவக்கம் 9ல் தேரோட்டம்



  • சோலார் மின் உற்பத்தி: மாதம் ரூ. 30,000 மிச்சம் ஸ்ரீரங்கம் கோயில் அசத்தல்



  • மணலி புதுநகரில் வைகுண்டசாமி ஆனி திருவிழா



  • பெரியபாளையம் அருகே செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்



  • நரசிம்ம பெருமாள் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்



  • திருப்போரூர் அருகே திரவுபதி அம்மன் கோயில் தீ மிதி விழா



  • ஸ்ரீரங்கம் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் தங்கக்குடத்தில் புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலம்



  • பெரம்பலூர் அருகே அரவானுக்கு ரத்தசோறு படையல் பக்தர்கள் குவிந்தனர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com