இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

அனுமதியின்றி கூட்டம், நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை

2/21/2019 2:23:22 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

புழல்: போலீசாரின் அனுமதிபெறாமல் கூட்டம், நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னை புழல், மாதவரம் பால்பண்ணை, மணலி, செங்குன்றம், சோழவரம் மற்றும் பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அரசியல் கட்சி ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுநல சங்கங்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதற்கு போலீசாரின் உரிய அனுமதி பெறப்படுவது இல்லை என்று தெரிகிறது.இதனால் அந்தந்த காவல் நிலையங்களில் பணியாற்றும் உளவுத் துறை போலீசாருக்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்து எவ்வித விவரங்களும் தெரிவதில்லை. இதன்காரணமாக கூட்டம் நடக்கும்போது ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் போலீசாருக்கு தெரிவது இல்லை. அசம்பாவிதம் தடுக்கமுடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.

இதுபற்றி உளவுத்துறை போலீசார் கூறுகையில், ‘’ எந்த கூட்டம் நடத்தினாலும் போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் அரசியல் பொதுக்கூட்டம் தவிர பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு யாரும் அனுமதி பெறுவது கிடையாது. இதனால் கூட்டம் நடக்கும் இடத்தில் தேவையற்ற பிரச்னை ஏற்படும்போது போலீசார் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதனால் அடிதடி உள்பட பல சம்பவங்கள் நடக்கிறது. இது பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியையும் மக்களிடையே போலீசாருக்கு இருக்கும் நன்மதிப்பும் குறைகிறது. பொதுவாக ஒரு நிகழ்ச்சி நடத்தும்போது அதற்கான அழைப்பிதழை காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். இதன்பிறகு போலீசார் அனுமதி கொடுத்தபிறகுதான் கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது கிடையாது. எனவே, அனுமதியில்லாமல் கூட்டம் நடத்தினால் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களது பொதுக்கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டங்களுக்கு போலீசாரிடம் உரிய அனுமதி பெறவேண்டும்’ என்றனர்.

மேலும் சில
  • திருவள்ளூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா



  • வடபழனி காமராஜ் சிறப்பு மருத்துவமனையில் உலக ஆண்கள் தின வாரவிழா



  • பள்ளிப்பட்டில் திடீர் மழை... விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி



  • திருப்போரூர் அருகே பரபரப்பு... வெல்டிங் கடை உடைத்து கொள்ளை



  • காஞ்சி. அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காசிகுட்டை குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இளைஞர், தன்னார்வலர்கள்



  • அழைப்பிதழ் கொடுத்த பிறகு திருமணம் செய்ய மகன் மறுப்பு... போலீஸ் எஸ்ஐ தூக்கிட்டு சாவு



  • வீடிழந்த குடும்பத்துக்கு ஜெகத்ரட்சகன் நிதியுதவி



  • தொழில் முனைபவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்



  • லாரி மோதி பால் வியாபாரி பரிதாப சாவு



  • நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com