இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

கைவண்டூர் ஊராட்சியில் தனிநபர் கழிவறை நிதியில் முறைகேடு? போராட்டம் நடத்த மக்கள் முடிவு

2/21/2019 2:35:48 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

திருவள்ளூர்: கைவண்டூர் ஊராட்சியில், தனிநபர் கழிவறை கட்டி 2 ஆண்டுகளாகியும், இதுவரை அதற்கான அரசு நிதி, 84 பயனாளிகளுக்கு வழங்கவில்லை. இதில் பல லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்குட்பட்டது கைவண்டூர் ஊராட்சி. இங்கு, தூய்மை பாரத இயக்கம் சார்பில் ஒவ்வொரு குடியிருப்பிலும் தனிநபர் கழிவறை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கழிவறை கட்ட ஒவ்வொரு பயனாளிக்கும், ரூ.12 ஆயிரம் வீதம் அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. இதையடுத்து இக்கிராமத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தலை முற்றிலும் ஒழித்திட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2015-16ம் ஆண்டு தனிநபர் கழிவறை கட்ட 84 பயனாளிகள் விண்ணப்பித்தனர். தொடர்ந்து, கழிவறைகளையும் கடன் வாங்கி கட்டி முடித்தனர். இவ்வாறு கடன் வாங்கி கழிவறை கட்டி முடித்து, 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை உதவி தொகை யாருக்கும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலர் மற்றும் முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர் ஆகியோரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்த ஒரு கிராமத்தில் மட்டும் 84 பயனாளிகளுக்கு சேர வேண்டிய ரூ.10 லட்சத்து 8 ஆயிரம் பயனாளிகளுக்கு சேரவில்லை. இதேநிலை பல ஊராட்சிகளில் உள்ளது. 2 ஆண்டுகள் ஆகியும் அரசு நிதி கிடைக்காததால், இதில் முறைகேடு நடந்துள்ளதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து பயனாளிகள் கூறுகையில், ‘மாவட்ட கலெக்டர் இக்கிராமத்தில் திடீர் ஆய்வு செய்து, தனிநபர் கழிவறை நிதியில் முறைகேடு நடந்துள்ளதா என கண்டறிய வேண்டும். மேலும் பயனாளிகளுக்கு உடனடியாக உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை இல்லையேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வரும் 28ம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம்’ என்றனர்.

மேலும் சில
  • திருவள்ளூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா



  • வடபழனி காமராஜ் சிறப்பு மருத்துவமனையில் உலக ஆண்கள் தின வாரவிழா



  • பள்ளிப்பட்டில் திடீர் மழை... விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி



  • திருப்போரூர் அருகே பரபரப்பு... வெல்டிங் கடை உடைத்து கொள்ளை



  • காஞ்சி. அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காசிகுட்டை குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இளைஞர், தன்னார்வலர்கள்



  • அழைப்பிதழ் கொடுத்த பிறகு திருமணம் செய்ய மகன் மறுப்பு... போலீஸ் எஸ்ஐ தூக்கிட்டு சாவு



  • வீடிழந்த குடும்பத்துக்கு ஜெகத்ரட்சகன் நிதியுதவி



  • தொழில் முனைபவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்



  • லாரி மோதி பால் வியாபாரி பரிதாப சாவு



  • நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com