இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

சென்னையில் 30ம் தேதி உயர்மட்டக் குழு கூட்டம்... ஜாக்டோ ஜியோ மீண்டும் போராட்டத்துக்கு ஆயத்தம்

6/24/2019 3:06:36 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

திருச்சி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை அரசு இன்னும் விலக்கி கொள்ளாததால் மீண்டும் போராட்டத்தில் குதிப்பதா என முடிவெடுக்க ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக்குழு கூட்டம் வரும் 30ம் தேதி சென்னையில் நடக்கிறது என ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தாஸ், அன்பரசு கூறினர். இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் கூறியதாவது: ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக்குழு கூட்டம் வரும் 30ம் தேதி சென்னையில் நடக்கிறது. அரசு வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை கைவிட்டு பணிக்குச் சென்றோம். அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, போராட்டம் நடத்தியவர்கள் மீதான நடவடிக்கை, ரத்து செய்யப்பட்டது. அதேபோல், தற்போதைய அரசும், பேச்சு நடத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அரசு பள்ளிகளில், தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. அரசு பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள் வழங்காமல் உள்ளனர். இவற்றை சரி செய்ய வேண்டும். தவறினால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கூறியதாவது: புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைகளுக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதற்காக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்யும் என எதிர்பார்த்தோம். ஆனால் இன்னும் ரத்து செய்யவில்லை. இதன் விளைவாக தற்போது ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பறிக்கப்பட்டுள்ளது. ஜூனியர்களுக்கு அரசு பதவி உயர்வு வழங்கி பழிவாங்குகிறது. இதனால் பதவி உயர்வு கிடைக்காதவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் இழப்புகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏற்க முடியாது. இதுதொடர்பாக பேசி முடிவெடுக்க வரும் 30ம் தேதி சென்னையில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அரசு எங்களை அழைத்து பேசி சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என உயர்மட்ட குழுவில் பேசி முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • திருவள்ளூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா



  • வடபழனி காமராஜ் சிறப்பு மருத்துவமனையில் உலக ஆண்கள் தின வாரவிழா



  • பள்ளிப்பட்டில் திடீர் மழை... விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி



  • திருப்போரூர் அருகே பரபரப்பு... வெல்டிங் கடை உடைத்து கொள்ளை



  • காஞ்சி. அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காசிகுட்டை குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இளைஞர், தன்னார்வலர்கள்



  • அழைப்பிதழ் கொடுத்த பிறகு திருமணம் செய்ய மகன் மறுப்பு... போலீஸ் எஸ்ஐ தூக்கிட்டு சாவு



  • வீடிழந்த குடும்பத்துக்கு ஜெகத்ரட்சகன் நிதியுதவி



  • தொழில் முனைபவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்



  • லாரி மோதி பால் வியாபாரி பரிதாப சாவு



  • நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com