இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

இரவு நேரத்தில் தண்ணீர் திருட்டு குடிநீர் லாரிகளை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டம்

6/24/2019 3:07:20 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

பூந்தமல்லி: கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்யாமல் போனதால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன. மேலும் கோடையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நிலத்தடிநீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் எந்த ஆண்டும் இல்லாமல் இந்தாண்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. பெரும்பாலான சென்னைவாசிகள், லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீரை நம்பியிருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இதனால் லாரி வைத்திருப்பவர்கள் எந்த இடத்தில் தண்ணீர் கிடைத்தாலும் அதனை எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம், பாணவேடுதோட்டம், பிடாரிதாங்கல் ஆகிய பகுதிகளில் தனியார் நிலங்களில் அதிக ஆழம் கொண்ட ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் ஜெனரேட்டர் வசதியுடன் தண்ணீர் திருட்டு கன ஜோராக நடந்து வருகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள், பாரிவாக்கம் அருகே நேற்றிரவு தண்ணீர் ஏற்றி சென்ற லாரிகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 60 அடியில் ஆழ்குழாய் அமைக்கப்பட்ட இடத்தில், தற்போது 300 அடி முதல் 600 அடி ஆழத்துக்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம் வேண்டுமென்றால் மக்களின் தாகம் தீர்க்க இங்கிருந்து லாரிகளில் தண்ணீர் எடுத்து செல்லலாம். ஆனால் இங்கு முழுக்க முழுக்க வியாபாரம் நோக்கத்தோடு தனியார் தண்ணீர் லாரி வைத்திருப்பவர்கள், நாளொன்றுக்கு 500 முதல் 700 லாரிகளில் தண்ணீர் எடுத்து செல்கின்றனர். இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் பல்வேறு போராட்டங்களை ஈடுபடுவோம்’ என்றனர். இதைத் தொடர்ந்து தற்காலிகமாக அந்த பகுதிகளில் லாரிகளில் தண்ணீர் எடுக்க போலீசார் தடை விதித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சில
  • திருவள்ளூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா



  • வடபழனி காமராஜ் சிறப்பு மருத்துவமனையில் உலக ஆண்கள் தின வாரவிழா



  • பள்ளிப்பட்டில் திடீர் மழை... விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி



  • திருப்போரூர் அருகே பரபரப்பு... வெல்டிங் கடை உடைத்து கொள்ளை



  • காஞ்சி. அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காசிகுட்டை குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இளைஞர், தன்னார்வலர்கள்



  • அழைப்பிதழ் கொடுத்த பிறகு திருமணம் செய்ய மகன் மறுப்பு... போலீஸ் எஸ்ஐ தூக்கிட்டு சாவு



  • வீடிழந்த குடும்பத்துக்கு ஜெகத்ரட்சகன் நிதியுதவி



  • தொழில் முனைபவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்



  • லாரி மோதி பால் வியாபாரி பரிதாப சாவு



  • நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com