இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

லண்டனில் ராகுல் காந்தி பேசிய விவகாரம், 2வது நாளாக ஆளுங்கட்சி எம்பிக்கள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு; ஆஸ்கர் விருது குழுவுக்கு பாராட்டு

3/14/2023 6:43:29 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

புதுடெல்லி: லண்டனில் ராகுல் காந்தி பேசிய விவகாரம் தொடர்பாக 2வது நாளாக ஆளுங்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற குழுவினருக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஆளும் கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியது இல்லை. முதல் முறையாக ஆளும் கட்சி எம்பிக்கள் இரு நாட்களாக போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கியது. அவை தொடங்கியதும், இந்திய நாடாளுமன்றம் குறித்து இங்கிலாந்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மக்களவையில் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பிரஹலாத் ஜோஷியும், மாநிலங்களவையில் பியூஷ் கோயலும் பேசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரையும், அதனை தொடர்ந்து நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் தொடங்கும் முன், ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங், அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து சபையில் விவாதிக்க கோரி நோட்டீஸ் அளித்தார். இதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நோட்டீஸ் அளித்தனர். மேலும் சில எம்பிக்கள் எதிர்கட்சி தலைவர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறியும், இதுகுறித்து விவாதிக்க கோரியும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர். இதற்கிடையே அதானி குழும விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். அதானி விவகாரத்தில் ஜேபிசி விசாரணை கோரி பிஆர்எஸ், ஆம் ஆத்மி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற நுழைவு வாயில் முன் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற அவை நடவடிக்கையில் பங்கேற்க வந்த காங்கிரஸ் எம்பி ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, நிருபர்களிடம் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு ஒன்றிய அரசு விரும்பவில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தை முடக்கும் வகையில் கூச்சல் போடுவதை எப்போதாவது பார்த்ததுண்டா? ராகுல் காந்தி எதற்காக மன்னிப்பு  கேட்க வேண்டும்? மாறாக, அவர்கள் (ஒன்றிய அரசு) தான் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று ஆவேசமாக கூறினார். தொடர்ந்து காலை 11 மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கியதும், இரு அவைகளிலும் ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் திரைப்படக் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதன்பின் இரு அவைகளிலும் ராகுல்காந்தி லண்டனில் பேசிய விவகாரம் ெதாடர்பாக ஆளுங்கட்சி எம்பிக்களுக்கும், எதிர்கட்சி எம்பிக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவையில் கூச்சல், குழப்பமும் ஏற்பட்டதால், அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. ஆளுங்கட்சி எம்பிக்களே இரண்டாவது நாளாக அவையில் கூச்சல், குழப்பம், அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில
  • பிரிட்டனின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களுடன் இஸ்ரோவின் எல்விஎம். 3-எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது



  • ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்: ெடல்லி ராஜ்காட்டில் 144 தடை; போலீஸ் படை குவிப்பால் பரபரப்பு



  • கர்நாடகா சட்டசபை தேர்தல் 124 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது: மாஜி முதல்வர் வருணா தொகுதியில் போட்டி



  • அன்று தலைவர் பதவியில் இருந்து விலகல்... இன்று எம்பி பதவி தகுதி நீக்கம்: ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?



  • சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்: நாளை மறுநாள் விசாரணை



  • பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடாது: அனுராக் தாக்கூர்



  • கோலாலம்பூர் விமானத்தில் நடுவானில் மலேசிய பயணி மாரடைப்பினால் பலி



  • பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை: 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு



  • ஆதாருடன் வாக்காளர் எண் இணைப்பு: கால அவகாசம் ஓராண்டு நீடிப்பு



  • திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏப்ரல், ஜூன் மாத தரிசன டிக்கெட் இன்று மாலை ஆன்லைனில் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com