இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஆளுங்கட்சி - எதிர்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் 3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது: அடுத்தகட்ட உத்தி குறித்து 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை

3/15/2023 5:35:03 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

புதுடெல்லி: ஆளுங்கட்சி - எதிர்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் 3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. அடுத்தகட்ட உத்தி குறித்து 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதேநேரம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனது லண்டன் பயணத்தின் போது இந்திய ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்தியதாகவும், அதனால் அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனக்கூறி ஆளுங்கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனர்.

ஆளுங்கட்சி - எதிர்கட்சி எம்பிக்கள் அடுத்தடுத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 2 நாட்களுக்காக இரு அவைகளும் முடங்கியது. இவ்விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே இன்று மூன்றாவது நாளாக நாடாளுமன்றம் கூடும் முன் காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, அரசியலமைப்புச் சட்டத்தின் 105வது பிரிவின் கீழ் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரத்தின் சாராம்சம், பொருள் குறித்து விரிவான விவாதம் நடத்தக் கோரி, மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அவர்கள் (பாஜக) பல நாடுகளுக்கு செல்லும் போது இந்திய மக்களின் கலாசாரத்தையும், மனித நேயத்தையும் அவமதித்தீர்களா? இல்லையா? என்பதை அவர்களிடம் கேட்போம். அவர் (ராகுல் காந்தி) ஜனநாயகம் குறித்து தான் பேசினார். பிரதமர் மோடி இந்திய மக்களை அவமதிக்கும் வகையில், இந்தியாவில் பிறந்ததே பாவம் என்று கூறியுள்ளார். அதனால் தற்போது நாட்டில் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் பலவீனப்படுத்தப்படுகிறது. உண்மை சொல்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்’ என்றார். எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ்  எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு  போராட்டம் நடத்தினர்.

அதானி குழும விவகாரத்தில் அடுத்த கட்ட உத்தி குறித்து விவாதிப்பதற்காக, 18 எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றாக சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டதால், விஜய் சவுக் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராஜ்யசபா எதிர்கட்சி தலைவரான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பார்லிமென்ட் அறையில், எதிர்க்கட்சி எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 18 எதிர்கட்சி எம்பிக்களும் கையெழுத்திட்ட கடிதத்தை பெறுதல், புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களை நோக்கி பேரணியாக செல்லுதல் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்பின் காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியதும், மக்களவையில் எதிர்கட்சிகள் அதானி குழும விவகாரத்தை எழுப்பினர். ஆளுங்கட்சி எம்பிக்கள், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூச்சலிட்டனர். அதனால் மக்களவை நடவடிக்கைகள் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் மாநிலங்களவையும் ஆளுங்கட்சி - எதிர்கட்சிகள் அமளி ஏற்பட்டதால் நாடாளுமன்றம் மூன்றாவது நாளாக முடங்கியது.

மேலும் சில
  • பிரிட்டனின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களுடன் இஸ்ரோவின் எல்விஎம். 3-எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது



  • ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்: ெடல்லி ராஜ்காட்டில் 144 தடை; போலீஸ் படை குவிப்பால் பரபரப்பு



  • கர்நாடகா சட்டசபை தேர்தல் 124 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது: மாஜி முதல்வர் வருணா தொகுதியில் போட்டி



  • அன்று தலைவர் பதவியில் இருந்து விலகல்... இன்று எம்பி பதவி தகுதி நீக்கம்: ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?



  • சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்: நாளை மறுநாள் விசாரணை



  • பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடாது: அனுராக் தாக்கூர்



  • கோலாலம்பூர் விமானத்தில் நடுவானில் மலேசிய பயணி மாரடைப்பினால் பலி



  • பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை: 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு



  • ஆதாருடன் வாக்காளர் எண் இணைப்பு: கால அவகாசம் ஓராண்டு நீடிப்பு



  • திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏப்ரல், ஜூன் மாத தரிசன டிக்கெட் இன்று மாலை ஆன்லைனில் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com