இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு; சிபிஐ கோர்ட்டில் லாலு, ரப்ரி, மிசா பாரதி ஆஜர்: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன்

3/15/2023 5:38:32 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

புதுடெல்லி: ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிராசாத், அவரது மனைவி ரப்ரி தேவி, அவர்களது மகள் உள்ளிட்டோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர். கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய  முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக  பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் பதவி வகித்தார். அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் பாட்னாவை சேர்ந்த சிலர்  நியமிக்கப்பட்டனர். அதற்கு கைம்மாறாக, வேலை பெற்றவர்கள் அல்லது  அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சுமார் 1.05 லட்சம்  சதுரஅடி நிலம், லாலு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டுப் பதிவு செய்யப்பட்டது.

அந்த நிலத்தை சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு  குடும்பத்தினர் நேரடியாக வாங்கியுள்ளனர். இவ்விவகாரம் ெதாடர்பாக லாலு பிரசாத், அவரது மனைவி ரப்ரி தேவி, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீது டெல்லி சிபிஐ வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த வாரம் சிபிஐ சோதனை நடத்தியது. அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ. 1 கோடி ரொக்கம், ரூ. 1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள், தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதற்கு முன்னதாக அமலாக்கத்துறையின் விசாரணையில், ரூ. 600 கோடி மதிப்பிலான மோசடி வருவாய்க்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கண்ட வழக்கில் லாலு யாதவ், ரப்ரி தேவி, மிசா பாரதி உட்பட 16 பேருக்கு  சிபிஐ நீதிமன்றம் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதனால் இந்த வழக்கின் விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி, அவரது மகளான எம்பி மிசா பாரதி உள்ளிட்டோர் ஆஜராகினர். இவர்களில் சமீபத்தில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட லாலு, சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர்களிடம், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட்டது.

சிபிஐ கைது செய்யாமல் இருப்பதற்காக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் ெசய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒவ்வொருவரும் தலா ரூ.50,000 சொந்த ஜாமீன் பத்திரம் மற்றும் அதற்கு இணையான ஜாமீன் தொகையை வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மேலும் சில
  • பிரிட்டனின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களுடன் இஸ்ரோவின் எல்விஎம். 3-எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது



  • ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்: ெடல்லி ராஜ்காட்டில் 144 தடை; போலீஸ் படை குவிப்பால் பரபரப்பு



  • கர்நாடகா சட்டசபை தேர்தல் 124 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது: மாஜி முதல்வர் வருணா தொகுதியில் போட்டி



  • அன்று தலைவர் பதவியில் இருந்து விலகல்... இன்று எம்பி பதவி தகுதி நீக்கம்: ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?



  • சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்: நாளை மறுநாள் விசாரணை



  • பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடாது: அனுராக் தாக்கூர்



  • கோலாலம்பூர் விமானத்தில் நடுவானில் மலேசிய பயணி மாரடைப்பினால் பலி



  • பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை: 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு



  • ஆதாருடன் வாக்காளர் எண் இணைப்பு: கால அவகாசம் ஓராண்டு நீடிப்பு



  • திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏப்ரல், ஜூன் மாத தரிசன டிக்கெட் இன்று மாலை ஆன்லைனில் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com