இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

வைர வியாபாரியிடம் ரூ.60 லட்சம் வைர கற்கள் கொள்ளை 3 ஆண்டுக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது

3/21/2023 5:57:49 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

திருமலை: வைர வியாபாரியை ஏமாற்றி ரூ.60 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சுமார் 3 ஆண்டுக்கு பிறகு கோவாவை சேர்ந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அல்மாஸ்பேட்டையை சேர்ந்தவர் காதர்பாஷா, வைர வியாபாரி. இவரிடம் 2020ம் ஆண்டு ஜனவரி 16ம்தேதி செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ‘எங்களுக்கு அதிகளவு வைர கற்கள் வேண்டும், நாங்கள் கடப்பாவில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியுள்ளோம். இங்கு வந்தால் வியாபாரம் செய்து கொள்ளலாம் எனக்கூறியுள்ளனர். இதை உண்மை என நம்பிய காதர்பாஷா அவர்கள் தெரிவித்த லாட்ஜூக்கு வைரக்கற்களுடன் சென்றார். அங்கிருந்த கும்பல் திடீரென காதர்பாஷாவிடம் இருந்த சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வைர கற்களை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ரிம்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஒரு சில நாட்களில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர், கொள்ளை கும்பலுக்கு துணையாக வந்தவர் என்பதும், கொள்ளை கும்பல் தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் முக்கிய குற்றவாளி கோவாவைச் சேர்ந்த இஸ்மாயில் ஷாகித் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கோவாவில் இருந்த அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.53 லட்சம் மதிப்புள்ள 1 புஷ்ப ராகம், 3 வைர கற்களை பறிமுதல் செய்தனர். மேலும் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய குற்றவாளி பிடிபட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, மீதி வைரக்கற்கள் எங்கு உள்ளது என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • பிரிட்டனின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களுடன் இஸ்ரோவின் எல்விஎம். 3-எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது



  • ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்: ெடல்லி ராஜ்காட்டில் 144 தடை; போலீஸ் படை குவிப்பால் பரபரப்பு



  • கர்நாடகா சட்டசபை தேர்தல் 124 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது: மாஜி முதல்வர் வருணா தொகுதியில் போட்டி



  • அன்று தலைவர் பதவியில் இருந்து விலகல்... இன்று எம்பி பதவி தகுதி நீக்கம்: ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?



  • சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்: நாளை மறுநாள் விசாரணை



  • பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடாது: அனுராக் தாக்கூர்



  • கோலாலம்பூர் விமானத்தில் நடுவானில் மலேசிய பயணி மாரடைப்பினால் பலி



  • பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை: 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு



  • ஆதாருடன் வாக்காளர் எண் இணைப்பு: கால அவகாசம் ஓராண்டு நீடிப்பு



  • திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏப்ரல், ஜூன் மாத தரிசன டிக்கெட் இன்று மாலை ஆன்லைனில் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com