இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் புதிய முனைய திறப்பு விழா தள்ளி வைப்பு

3/24/2023 5:28:40 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

மீனம்பாக்கம்: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், ரூ.2400 கோடி திட்ட மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் புதிய ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல்கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்தன. மொத்தம் 5 தளங்களுடன் கூடிய புதிய விமான நிலையத்தின் கீழ்தளத்தில், பயணிகளின் உடைமைகள் கையாள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தரைதளத்தில் சர்வதேச பயணிகள் வருகை பகுதியாக, பயணிகளுக்கான வழக்கமான நடைமுறைகள் கையாளப்படும்.

2வது தளத்தில், பயணிகளின் புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மற்ற தளங்களில் விமான நிறுவன அலுவலகங்கள், பயணிகள் ஓய்வறை மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன. தற்போது அக்கட்டிடத்தில் நவீன கருவிகள், உபகரணங்கள் பொருத்தப்பட்டு, சோதனைகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக, புதிய முனையத்தின் கீழ்தளத்தில், விமான பயணிகள் உடைமைகள் கையாளப்படும் பணிகள் கடந்த 10ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்து விட்டது.

இந்த புதிய முனையத்தில் உள்ள மல்டிலெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் மால், திரையரங்குகள் போன்றவற்றை கடந்த பிப்ரவரி 4ம் தேதி விமான போக்குவரத்து துறை அமைச்சர் முறைப்படி துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த புதிய முனையத்தின் பயன்பாட்டை வரும் 27ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைப்பார் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இதன் திறப்புவிழா தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. புதிய முனையத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றாலும், அங்கு மின்கருவிகள், இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக தெற்கு மண்டலத்தில் உள்ள 12 விமானநிலைய மின் பொறியாளர்கள் மூலம் இரவு, பகலாக பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் தடையில்லா சான்றிதழ் கிடைத்த பிறகுதான், புதிய முனையத்தை பிரதமர் வந்து திறந்து வைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, வரும் 27ம் தேதி நடைபெற இருந்த புதிய முனைய திறப்பு விழா தள்ளி வைக்கப்படுகிறது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின், அடுத்த மாதம் 14ம் தேதி புதிய முனையத்தை பிரதமர் திறந்து வைத்து, நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் சில
  • அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்



  • மதுரையில் கூடுதல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • ஓட்டேரியில் திமுக சார்பில் பட்டிமன்றம் முதல்வர் தோளில் பொறுப்பை சுமக்கும் காரணத்தால் பொற்காலமாக திகழ்கிறது: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு



  • கூடுவாஞ்சேரியில் பிரதான சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்



  • நடுரோட்டில் தீப்பிடித்து நாசமான கார்: 2 பேர் படுகாயம்



  • மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று புதிய பெயர்: முதல்வர் திறந்து வைத்தார்



  • உடல்நலக் குறைவால் நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியன் இன்று அதிகாலை காலமானார்.



  • சென்னை விமானநிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் 8 ஆக அதிகரிப்பு



  • ‘‘என் கணவரை துடிதுடிக்க கொன்ற அனைவரையும் தூக்கில் போடுங்கள்’’: ஜெகன் மனைவி கண்ணீர்



  • தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான பேரிடர் மேலாண்மை கொள்கை வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com