இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சென்னை விமானநிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் 8 ஆக அதிகரிப்பு

3/24/2023 5:29:42 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் பயணிகளின் வசதிக்காக இயங்கி வந்த பேட்டரி வாகனங்கள், இன்று முதல் 8 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதற்கு விமானப் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னை விமானநிலையத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில், இதுவரை பயணிகளின் வசதிக்காக 4 பேட்டரி வாகனங்கள் இலவச சேவையாக இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு நாளொன்றுக்கு பயணிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் ஏற்கெனவே இயங்கி வரும் 4 பேட்டரி வாகனங்களில் செல்வதற்கு பயணிகளின் நெரிசல் அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, கூடுதலாக 4 புதிய பேட்டரி வாகனங்கள் வாங்குவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, சென்னை விமான நிலையத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இடையே இன்று முதல் கூடுதலாக 4 புதிய பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. உள்நாட்டு முனையத்தில் ஏற்கெனவே இயங்கும் ஒரு பேட்டரி வாகனத்துடன் கூடுதலாக 2 புதிய வாகனங்கள் இயங்குகின்றன. அதேபோல் சர்வதேச முனையத்தில் கூடுதல் ஒரு பேட்டரி வாகனம் இயக்கப்படுகிறது.

மேலும் சென்னை விமானநிலையத்தின் கிழக்கு, மேற்கு பகுதிகளை இணைக்கும் விதத்தில், புதிதாக 2 பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகளுக்கு உடனுக்குடன் பேட்டரி வாகனங்கள் கிடைக்கும். அவர்கள் தங்கள் லக்கேஜ்களை டிராலிகளில் வைத்து தள்ளிக்கொண்டு சிரமப்படாமல், பேட்டரி வாகனங்களில் ஏற்றிக்கொண்டு இலவசமாக பயணம் செய்யலாம். இந்த பேட்டரி வாகனங்கள் வயதானவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகள் போன்றவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. சென்னை விமானநிலையத்தில் கூடுதலாக 4 பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுவதற்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

மேலும் சில
  • அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்



  • மதுரையில் கூடுதல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • ஓட்டேரியில் திமுக சார்பில் பட்டிமன்றம் முதல்வர் தோளில் பொறுப்பை சுமக்கும் காரணத்தால் பொற்காலமாக திகழ்கிறது: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு



  • கூடுவாஞ்சேரியில் பிரதான சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்



  • நடுரோட்டில் தீப்பிடித்து நாசமான கார்: 2 பேர் படுகாயம்



  • மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று புதிய பெயர்: முதல்வர் திறந்து வைத்தார்



  • உடல்நலக் குறைவால் நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியன் இன்று அதிகாலை காலமானார்.



  • சென்னை விமான நிலையத்தில் புதிய முனைய திறப்பு விழா தள்ளி வைப்பு



  • ‘‘என் கணவரை துடிதுடிக்க கொன்ற அனைவரையும் தூக்கில் போடுங்கள்’’: ஜெகன் மனைவி கண்ணீர்



  • தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான பேரிடர் மேலாண்மை கொள்கை வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com