இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நடுரோட்டில் தீப்பிடித்து நாசமான கார்: 2 பேர் படுகாயம்

3/24/2023 5:34:57 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

திண்டுக்கல்: சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்தவர் பொன்னம்பலம்(78). இவரது மனைவி மாமியார் கீதா(66), மருமகன் சந்தோஷ்குமார்(46). மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெறுதற்காக, இன்று அதிகாலை ஒரு காரில் பொன்னம்பலம் கிளம்பினார். உடன் கீதா, சந்தோஷ்குமார் ஆகியோரும் இருந்தனர். காரை சாந்தப்பன்(33) என்பவர் ஓட்டினார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் மின் அலுவலகம் எதிரில் காலை 8 மணியளவில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் மீது மோதி சாலையின் நடுவில் தலைக்குப்புற கவிழ்ந்தது. தொடர்ந்து காரில் தீப்பற்றி எரிய துவங்கியது. காரிலிருந்து சந்தோஷ்குமார் மற்றும் கீதா உடனடியாக வெளியேறினர். கார் இடிபாடுகளில் பொன்னம்பலம் மற்றும் சாந்தப்பன் சிக்கி கொண்டனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதிமக்கள் உடனடியாக செயல்பட்டு, இடுபாடுகளில் சிக்கி தவித்த பொன்னம்பலம் மற்றும் சாந்தப்பனை மீட்டனர்.

இருப்பினும் பொன்னம்பலத்தின் இரண்டு கால்களும், சாந்தப்பனின் முழங்காலுக்கு கீழும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து வந்த போலீசார், தீக்காயமடைந்த பொன்னம்பலம் மற்றும் சாந்தப்பனை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்



  • மதுரையில் கூடுதல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • ஓட்டேரியில் திமுக சார்பில் பட்டிமன்றம் முதல்வர் தோளில் பொறுப்பை சுமக்கும் காரணத்தால் பொற்காலமாக திகழ்கிறது: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு



  • கூடுவாஞ்சேரியில் பிரதான சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்



  • மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று புதிய பெயர்: முதல்வர் திறந்து வைத்தார்



  • உடல்நலக் குறைவால் நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியன் இன்று அதிகாலை காலமானார்.



  • சென்னை விமானநிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் 8 ஆக அதிகரிப்பு



  • சென்னை விமான நிலையத்தில் புதிய முனைய திறப்பு விழா தள்ளி வைப்பு



  • ‘‘என் கணவரை துடிதுடிக்க கொன்ற அனைவரையும் தூக்கில் போடுங்கள்’’: ஜெகன் மனைவி கண்ணீர்



  • தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான பேரிடர் மேலாண்மை கொள்கை வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com