இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

முறை தவறிய உறவால் வந்த வினை; கணவருக்கு ைசலன்சரால் சூடு வைத்து தலையில் சிறுநீர் கழித்து சித்ரவதை: மனைவி, ஆட்டோ டிரைவர் கைது

3/8/2023 7:21:20 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

திருமலை: கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், அவர்கள் இறந்துவிட்டதாக முகநூலில் பதிவு செய்தார். ஆத்திரமடைந்த கள்ளக்காதலன், ஆட்டோ டிரைவருக்கு சூடு வைத்து, தலையை மொட்டை அடித்து சிறுநீர் கழித்து கொடுமை செய்துள்ளார். இதையடுத்து ஆட்டோ டிரைவரின் மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஏ.ரங்கம்பேட்டையை சேர்ந்தவர் வம்சி (30). ஆட்டோ டிரைவர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமான தெலங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த 25 வயதுள்ள இளம்பெண்ணை காதலித்துள்ளார். நீண்ட நாட்களாக காதலித்த இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்துள்ளனர்.

வம்சி, திருப்பதி முஸ்லிம்பேட்டையை சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் அன்வர் என்பவரின் ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வருகிறார். வாடகையை வசூலிக்க வம்சி வீட்டிற்கு அன்வர் வந்து செல்வாராம். அப்போது வம்சியின் காதல் மனைவியுடன் அன்வருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நெருக்கத்தை உருவாக்கியுள்ளது. வம்சி வீட்டில் இல்லாதபோது இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர், வம்சியிடம் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த வம்சி, மனைவியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் வம்சியின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு செல்லாமல் கள்ளக்காதலன் அன்வருடன் சென்றுள்ளார். இதனால் மன வேதனையடைந்த வம்சி, ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு பெங்களூரில் வேலைக்கு சென்றுவிட்டார்.

இதற்கிடையில் முகநூலில், தன் மனைவியும் அன்வரும் இணைந்து இருக்கும் போட்டோவை பார்த்த வம்சி கடும் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர்கள் இறந்து விட்டதாக இரங்கல் தகவலை ஆங்கிலத்தில் பதிவு செய்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த அன்வர், சந்திரகிரியை சேர்ந்த தனது நண்பர் ஹர்ஷா மற்றும் சிலருடன் பெங்களூர் சென்றார். வம்சியை காரில் சந்திரகிரிக்கு கடத்தி வந்தனர். மேலும் சில நண்பர்களுடன் வம்சியை சைலன்சரால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும் தலையில் சிறுநீர் கழித்து மொட்டை அடித்தனர். இதனை வீடியோ எடுத்தனர்.

இதையடுத்து ‘நான் செய்தது தவறு. அதனால் நானே மொட்டை அடித்து கொண்டேன்’ என பேசும்படி வம்சியை மிரட்டி அந்த வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதை பார்த்த வம்சியின் நண்பர்கள், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சந்திரகிரி போலீசில் வம்சி புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அன்வர், வம்சியின் மனைவி ஆகியோரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். முறைதவறிய உறவால் இச்சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது: பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை



  • குமரி ஆபாச பாதிரியார் வழக்கில்விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்



  • சூதாட்டத்தில் ரூ.20 ஆயிரம் இழப்பு; மது வாங்கி தரும்படி கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை: 2 பேர் கைது



  • கத்தியுடன் பைக்கில் சுற்றிய இளைஞர்கள் 2 பேர் கைது



  • வாரிசு இல்லாததால் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தங்கை கைது: மருத்துவமனையில் கவலைக்கிடம்



  • கிருஷ்ணகிரி பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த நகைகளுடன் உல்லாச சுற்றுலா: வாலிபர் கோவாவில் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு



  • காதலிக்க மறுத்த மாணவிக்கு உருட்டுக்கட்டை அடி மாணவர் மீது வழக்குப்பதிவு



  • ஸ்கேட்டிங் சிறுமி பாலியல் பலாத்காரம்: பயிற்சியாளருக்கு வலை



  • கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்



  • மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி பணம் நகை மோசடி: கார் டிரைவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com