இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி பணம் நகை மோசடி: கார் டிரைவர் கைது

3/19/2023 5:07:11 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

புதுச்சேரி: புதுவையில் மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி பணம், நகைகளை மோசடி செய்த கார் டிரைவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (75). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவரது கணவர் இறந்து விட்டார். இவர்களுக்கு சுப்பிரமணி, சுரேஷ், உதயசங்கர், விஸ்வநாதன் என 4 மகன்கள் உள்ளனர். இவர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இதனால் ஆதிலட்சுமி புதுச்சேரியில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஆதிலட்சுமியின் வங்கிக்கணக்கில் இருந்த பணமும், நகைகளும் திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து புதுச்சேரி சிபிசிஐடி பிரிவில் புகார் அளித்த ஆதிலெட்சுமி, கடந்த 2016ம் ஆண்டில் தனக்கு உதவியாளராகவும், கார் டிரைவராகவும் இருந்த ஜெயராமன் (33) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார், ஜெயராமனை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அப்போது அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே, ஜெயராமனை போலீசார் கைது ெசய்து கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
ஆதிலட்சுமியிடம் டிரைவராக பணிபுரிந்தபோது ஜெயராமன் மிகவும் விசுவாசமாக இருந்துள்ளார். இதனால் அவரை முழுமையாக நம்பிய ஆதிலெட்சுமி, தனது வங்கி பாஸ்புக், காசோலை, ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை கொடுத்து பணம் எடுத்து வர சொல்லியுள்ளார். இதனால் ஆதிலெட்சுமியின் பணம், நகைகளை அபகரித்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும் என ஜெயராமன் திட்டமிட்டுள்ளார். அதன்படி ஆதிலட்சுமிக்கு சந்தேகம் வராதபடி ஜெயராமன் தனது கைவரிசையை படிப்படியாக காட்டியுள்ளார்.

முதலில் புதுவை சித்தன்குடியில் இருந்த ஆதிலெட்சுமியின் வீட்டை ஜெயராமன் தனது நண்பரின் பெயருக்கு மாற்றியுள்ளார். பின்னர் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2 கோடி வரை பணத்தை எடுத்துள்ளார். கூடுதலாக 15 சவரன் தங்க நகைகளையும் எடுத்துள்ளார். இவற்றைக்கொண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தில் பண்ணை வீடு வாங்கி, மற்றொரு நண்பர் பெயரில் பதிவு செய்துள்ளார். மேலும் கார், டூவீலர், தங்க நகைகள் வாங்கி குவித்துள்ளார். மொத்தம் ரூ.5 கோடி ரூபாய் வரை அவர் ஏமாற்றி உள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ஜெயராமன் வைத்திருந்த கார், பைக், தங்க நகைகள், பத்திரங்கள் ஆகியவற்றை அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார், ஜெயராமனை நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஜெயராமனுக்கு உதவியாக இருந்த அவரது நண்பர்கள் சத்தியராஜ், தமிழழகன், நாகராஜ், லட்சுமி நாராயணன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது: பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை



  • குமரி ஆபாச பாதிரியார் வழக்கில்விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்



  • சூதாட்டத்தில் ரூ.20 ஆயிரம் இழப்பு; மது வாங்கி தரும்படி கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை: 2 பேர் கைது



  • கத்தியுடன் பைக்கில் சுற்றிய இளைஞர்கள் 2 பேர் கைது



  • வாரிசு இல்லாததால் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தங்கை கைது: மருத்துவமனையில் கவலைக்கிடம்



  • கிருஷ்ணகிரி பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த நகைகளுடன் உல்லாச சுற்றுலா: வாலிபர் கோவாவில் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு



  • காதலிக்க மறுத்த மாணவிக்கு உருட்டுக்கட்டை அடி மாணவர் மீது வழக்குப்பதிவு



  • ஸ்கேட்டிங் சிறுமி பாலியல் பலாத்காரம்: பயிற்சியாளருக்கு வலை



  • கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்



  • கோழி பண்ணைக்கு கடத்தமுயன்ற 2,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஊழியர் உள்பட 2 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com