இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வாரிசு இல்லாததால் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தங்கை கைது: மருத்துவமனையில் கவலைக்கிடம்

3/19/2023 5:18:24 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

பெரம்பூர்: வாரிசு இல்லாததால் பூர்வீக சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்ல முயன்ற தங்கையை கைது செய்தனர். பெரம்பூரில் இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பெரம்பூர் சபாபதி தெருவை சேர்ந்தவர் முனிரத்தினம் (63). இவரது மனைவி அம்முலு (60). இவர்களுக்கு குழந்தை கிடையாது. அமுலுவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 6 மாதங்களாக ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். முனிரத்தினம் வீட்டின் கீழ்தளத்தில் உள்ள ஒரு வீட்டில் முனிரத்தினத்தின் தங்கை தனலட்சுமி வசித்து வருகின்றார்.

இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் திருமணமாகிவிட்டதால் அவர்கள் தனித்தனியாக வசித்து வருகின்றனர். முனிரத்தினத்தின் மற்றொரு தங்கை பாக்கியலட்சுமி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்கள் பூர்வீக சொத்தில் வசித்துவருவதால் முனிரத்தினம் மற்றும் அவரது தங்கைகள் தனலட்சுமி, பாக்கியலட்சுமி ஆகியோர் இடையே பிரச்னை இருந்துள்ளது. பாக்கியலட்சுமியின் கணவர் தாமோதரன், இவரது மகன் உதயகுமார் ஆகியோர் பூர்வீக இடத்தில் உள்ள வீட்டின் மேல் தளத்தில் வசித்து வருகின்றனர்.

முனிரத்தினத்துக்கு குழந்தை இல்லை என்பதால் அவருக்கு தெரியாமல் அவர் குடியிருக்கும் குறிப்பிட்ட அந்த வீட்டின் பாகத்தை தனலட்சுமி ஏற்கனவே எழுதி வாங்கிவிட்டதாக தெரிகிறது. இந்த தகவல் அண்ணன் முனிரத்தினத்துக்கும் மேல் தளத்தில் தனது பாகத்தில் வசித்துவரும் தாமோதரனுக்கும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தனலட்சுமிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது இவ்வழக்கு முடியும் தருவாயில் உள்ளது. மேலும் இந்த வழக்கு முனிரத்தினத்துக்கு சாதகமாக வரும் என்று தெரியவந்துள்ளது. இதுபற்றி அறிந்ததும் தனலட்சுமி சிலநாட்களாகவே அடிக்கடி வந்து அண்ணன் முனிரத்தினத்திடம் தகராறு செய்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றிரவு மேல் தளத்தில் உள்ள தாமோதரன், அவரது மகன் ஆகியோர் முனிரத்தினத்துக்கு உணவு கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். இதன்பின்னர் முனிரத்தினம் உறங்க சென்றுவிட்டார். அதிகாலை 3 மணி அளவில் முனிரத்தினம் அலறும் சத்தம் கேட்டபோது அவரது வீட்டில் குடியிருக்கும் ராதா அம்மாள் என்பவர் சென்று பார்த்துள்ளார். பின்னர் தாமோதரன் மற்றும் உதயகுமாரை அழைத்து வந்து முனிரத்தினம் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு முனிரத்தினம் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக திருவிக.நகர் போலீசார் நடத்திய விசாரணையில், ‘’அதிகாலை 3 மணி அளவில் முனிரத்தினத்தின் தங்கை தனலட்சுமி மாடிக்கு சென்றுள்ளார். பின்னர் தான் கொண்டு சென்றிருந்த பெட்ரோலை அண்ணன் முனிரத்தினம் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். தீயில் கருகி அவர் சத்தம் போட்டதால் அங்கிருந்து தனலட்சுமி ஓடிவிட்டார்’ என்று தெரியவந்துள்ளது. இதுசம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து தனலட்சுமியை கைது செய்தனர். பூர்வீக சொத்து பிரச்னையில் அண்ணனை தங்கையே எரித்துக்கொல்ல முயன்ற சம்பவம் பெரம்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது: பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை



  • குமரி ஆபாச பாதிரியார் வழக்கில்விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்



  • சூதாட்டத்தில் ரூ.20 ஆயிரம் இழப்பு; மது வாங்கி தரும்படி கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை: 2 பேர் கைது



  • கத்தியுடன் பைக்கில் சுற்றிய இளைஞர்கள் 2 பேர் கைது



  • கிருஷ்ணகிரி பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த நகைகளுடன் உல்லாச சுற்றுலா: வாலிபர் கோவாவில் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு



  • காதலிக்க மறுத்த மாணவிக்கு உருட்டுக்கட்டை அடி மாணவர் மீது வழக்குப்பதிவு



  • ஸ்கேட்டிங் சிறுமி பாலியல் பலாத்காரம்: பயிற்சியாளருக்கு வலை



  • கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்



  • மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி பணம் நகை மோசடி: கார் டிரைவர் கைது



  • கோழி பண்ணைக்கு கடத்தமுயன்ற 2,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஊழியர் உள்பட 2 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com