இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது: பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை

3/26/2023 5:11:07 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

துரைப்பாக்கம்: வீட்டுவாசலில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த வக்கீல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுசம்பந்தமாக பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அருகே பெருங்குடி ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய் கணேஷ்(33). இவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். நேற்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஜெய் கணேஷ் விளையாடியுள்ளார்.

அந்த சமயத்தில் திடீரென ஒரு வழக்கறிஞருடன் ஜெய்கணேசுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு தனது வீட்டுக்கு வந்த ஜெய் கணேஷ், நண்பர்களுடன்  பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள், ஜெய் கணேஷை சுற்றிவளைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற ஜெய்கணேஷை மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஜெய்கணேஷ் கூச்சல் போட்டதால் பொதுமக்கள் வந்துள்ளனர். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் துரைப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் விரைந்து வந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய வழக்கறிஞர் ஜெய் கணேஷை மீட்டு உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், ‘’ ஏற்கனவே ஜெய்கணேஷ் இறந்துவிட்டார்’’ என்று தெரிவித்தனர். இதுசம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ‘’சென்னையில் பிரபல ரவுடியான சி.டி. மணியின் நெருங்கிய நண்பரான ஜெய்கணேஷ், அவருக்கு வழக்கு சம்பந்தமாகவும் ஆஜராகிவந்துள்ளர்.

 இதுபோல் சி.டி. மணிக்கு மற்றொரு நபரும் வக்கீலாக இருந்துள்ளார். இவர்கள் இரண்டுபேரும்தான் சி.டி.மணி சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் கவனித்து வந்துள்ளனர். பணம் கொடுக்கல், வாங்கல் உள்பட அனைத்து பணிகளையும் ஜெய்கணேஷ் , மற்றொரு வக்கீல் ஆகியோர் செய்துள்ளனர். இதனால் சி.டி.மணியிடம் நல்லபெயர் வாங்குவதற்காக இரண்டுபேரும் போட்டி போட்டு கொண்டு பணி செய்துள்ளனர். இந்த நிலையில்தான் அவர்கள் இடையே பிரச்னை வெடித்துள்ளது. சி.டி.மணியிடம் நெருக்கம் காண்பிக்கும் ஜெய்கணேஷை கொலை செய்ய திட்டம் போட்டு நண்பர்களுடன் சேர்ந்து ஜெய்கணேஷை கொலை செய்துள்ளனர்’ என தெரியவந்துள்ளது. இதையடுத்து 2 தனிப்படைகள் அமைத்து கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே வக்கீல் ஜெய்கணேஷை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்றிரவு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு வழக்கறிஞர்கள், அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ‘’கொலையாளிகளை விரைவில் கைது செய்கிறோம்’ என்று போலீசார் கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. வீட்டுவாசலில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த வக்கீல் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • குமரி ஆபாச பாதிரியார் வழக்கில்விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்



  • சூதாட்டத்தில் ரூ.20 ஆயிரம் இழப்பு; மது வாங்கி தரும்படி கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை: 2 பேர் கைது



  • கத்தியுடன் பைக்கில் சுற்றிய இளைஞர்கள் 2 பேர் கைது



  • வாரிசு இல்லாததால் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தங்கை கைது: மருத்துவமனையில் கவலைக்கிடம்



  • கிருஷ்ணகிரி பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த நகைகளுடன் உல்லாச சுற்றுலா: வாலிபர் கோவாவில் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு



  • காதலிக்க மறுத்த மாணவிக்கு உருட்டுக்கட்டை அடி மாணவர் மீது வழக்குப்பதிவு



  • ஸ்கேட்டிங் சிறுமி பாலியல் பலாத்காரம்: பயிற்சியாளருக்கு வலை



  • கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்



  • மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி பணம் நகை மோசடி: கார் டிரைவர் கைது



  • கோழி பண்ணைக்கு கடத்தமுயன்ற 2,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஊழியர் உள்பட 2 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com