இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

சூதாட்டத்தில் ரூ.20 ஆயிரம் இழப்பு; மது வாங்கி தரும்படி கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை: 2 பேர் கைது

3/23/2023 5:31:41 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

ஓசூர்: சூதாட்டத்தில் ரூ.20 ஆயிரத்தை இழந்த தொழிலாளி, மது வாங்கித்தரும்படி கேட்டபோது வாலிபர்கள் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள காரபள்ளியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மோகன் (27). சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் உமேஷ்(24), மூர்த்தி(20). நண்பர்களான இவர்கள் 3பேரும் நேற்று யுகாதி பண்டிகை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தனர். பின்னர் 3பேரும் சேர்ந்து ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடினர்.

அப்போது உமேஷ், மூர்த்தி ஆகிய இருவரும் சேர்ந்து மோகனிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை ஜெயித்து விட்டனர். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த மோகன், மது குடிப்பதற்காக டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அப்ேபாது உமேசும், மூர்த்தியும் மதுபான கடைக்கு டூவீலரில் வந்துள்ளனர். உடனே மோகன், உமேஷ், மூர்த்தி ஆகியோரிடம் ஜெயித்த பணத்தில் மது குடிக்க பணம் தரும்படி கேட்டுள்ளார்.

இதனால் மூன்று பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் டூவீலரில் வைத்திருந்த அரிவாளால் உமேஷ், மூர்த்தி ஆகியோர் மோகனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மோகனை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இதனிடையே மோகனை அரிவாளால் வெட்டிய உமேஷ், மூர்த்தி ஆகியோர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைதொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் உமேஷ், மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் சில
  • பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது: பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை



  • குமரி ஆபாச பாதிரியார் வழக்கில்விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்



  • கத்தியுடன் பைக்கில் சுற்றிய இளைஞர்கள் 2 பேர் கைது



  • வாரிசு இல்லாததால் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தங்கை கைது: மருத்துவமனையில் கவலைக்கிடம்



  • கிருஷ்ணகிரி பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த நகைகளுடன் உல்லாச சுற்றுலா: வாலிபர் கோவாவில் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு



  • காதலிக்க மறுத்த மாணவிக்கு உருட்டுக்கட்டை அடி மாணவர் மீது வழக்குப்பதிவு



  • ஸ்கேட்டிங் சிறுமி பாலியல் பலாத்காரம்: பயிற்சியாளருக்கு வலை



  • கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்



  • மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி பணம் நகை மோசடி: கார் டிரைவர் கைது



  • கோழி பண்ணைக்கு கடத்தமுயன்ற 2,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஊழியர் உள்பட 2 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com