இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வேளாங்கண்ணியில் இருந்து ஆஸி.க்கு தப்பி செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 6 பேர் கைது: ரூ.17 லட்சம் ரொக்கம் பறிமுதல்: விசைப்படகு உரிமையாளருக்கு வலை

3/8/2023 7:21:58 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

நாகை: வேளாங்கண்ணியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.17 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை அகதிகள் தப்பி செல்ல இருப்பதாக க்யூ பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில் வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகளில் டிஎஸ்பி சிவசங்கரன் தலைமையில் போலீசார் மற்றும் க்யூ பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வேளாங்கண்ணி மாதா கோயில் நிர்வாகத்துக்கு சொந்தமான விடுதி அறையில் இலங்கை அகதிகள் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் குளத்துவாய்ப்பட்டி முகாமை சேர்ந்த கேனுஜன் (34), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவர்பள்ளி முகாமை சேர்ந்த ஜெனிபர்ராஜ் (23), தினேஷ் (18), புவனேஸ்வரி (40), செய்யாறு கீழ்ப்புதுப்பாக்கம் வேல்முருகன் தெருவை சேர்ந்த துஷ்யந்தன் (36) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் வேளாங்கண்ணியில் மற்றொரு விடுதியில் தங்கியிருந்த வேலூர் வாலாஜாபேட்டை குடிமல்லூர் அகதிகள் முகாமை சேர்ந்த சதீஸ்வரன் (32) என்பவரையும் கைது செய்தனர்.

இந்த 6 பேரையும் வேளாங்கண்ணி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தொடர்ந்து நடத்திய விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத விசைப்படகில் ஆஸ்திரேலியா தப்பி செல்ல திட்டமிட்டதும், இதற்காக தங்களது முகாமில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் புறப்பட்டு வந்து வேளாங்கண்ணியில் அறை எடுத்து தங்கியிருந்ததும், படகில் செல்வதற்கு ரூ.17 லட்சத்தை செல்வத்துக்கு கொடுப்பதாக பேசி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து படகில் தப்பி செல்ல கொடுக்க வைத்திருந்த ரூ.17 லட்சத்தையும் பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீசார், இவர்களுக்கு பணம் எப்படி கிடைத்தது, இவர்களை ஒருங்கிணைத்தது யார் என்று விசாரிப்பதுடன் விசைப்படகு உரிமையாளரான செல்வத்தையும் தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது: பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை



  • குமரி ஆபாச பாதிரியார் வழக்கில்விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்



  • சூதாட்டத்தில் ரூ.20 ஆயிரம் இழப்பு; மது வாங்கி தரும்படி கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை: 2 பேர் கைது



  • கத்தியுடன் பைக்கில் சுற்றிய இளைஞர்கள் 2 பேர் கைது



  • வாரிசு இல்லாததால் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தங்கை கைது: மருத்துவமனையில் கவலைக்கிடம்



  • கிருஷ்ணகிரி பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த நகைகளுடன் உல்லாச சுற்றுலா: வாலிபர் கோவாவில் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு



  • காதலிக்க மறுத்த மாணவிக்கு உருட்டுக்கட்டை அடி மாணவர் மீது வழக்குப்பதிவு



  • ஸ்கேட்டிங் சிறுமி பாலியல் பலாத்காரம்: பயிற்சியாளருக்கு வலை



  • கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்



  • மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி பணம் நகை மோசடி: கார் டிரைவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com