இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரி முதல்வர் மீது மாணவிகளின் பாலியல் புகார்கள் குவிகின்றன: ஆபாச வீடியோக்கள், குறுஞ்செய்திகள் சிக்கியதால் பரபரப்பு

3/12/2023 4:59:33 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

சென்னை: மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதான ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம்மீது, பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயிற்சி பெற்று வரும் மாணவிகள் பலர் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்து வருவதால், அவரை  3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மிகவும் பழமையான உடற்பயிற்சி கல்லூரியான சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 500க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். குறிப்பாக மாணவிகள் தான் அதிகளவில் உடற்பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த கல்லூரியின் முதல்வராக கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜார்ஜ் ஆபிரகாம்(50) பணியாற்றி வந்தார். இவர், விளையாட்டு போட்டிகளில் ஆசிய, இந்திய அளவில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்கள் பெற்றுள்ளார். மேலும், ஆணழகன் போட்டியிலும் மாவட்ட அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.  இவர் முதல்வராக பணியாற்றி வரும் காலத்தில் தான் அதிகளவில் தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கல்லூரி விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்த மாணவி ஒருவர், முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது,’பயிற்சி என்ற பெயரில் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்’ என அளித்த புகாரின்பேரில் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. அதைதொடர்ந்து முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் முதல்வர் அந்த வழக்கில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று கைதாவதில் இருந்து தப்பினார்.

இதற்கிடையே, கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவி ஒருவரை முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் தனியாக அழைத்து, ‘சிறப்பு பயிற்சி’ என்ற பெயரில் மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஒய்எம்சிஏ கல்லூரி நிர்வாகத்திடம் கூறி அழுதுள்ளார். பிறகு கல்லூரி நிர்வாகம், கல்லூரியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை  பெற்று ஆய்வு செய்த போது, முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் சம்பவத்தன்று மாணவியை தனியாக உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்து செல்வது, பிறகு அந்த மாணவி அழுதபடி வெளியே வரும் காட்சிகள் இருந்தது. அதைதொடர்ந்து கல்லூரி நிர்வாகம் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

அந்த புகாரின் படி அனைத்து மகளிர் போலீசார், முதல்வரை நேரில் அழைத்து விசாரணை நடத்தியதில், 17 வயது மாணவியை உடற் பயிற்சி கூடத்திற்கு தனியாக அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதைதொடர்ந்து முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாமை போலீசார் கைது செய்ததால், அவரால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது கல்லூரியில் படித்து வரும் மாணவிகள் என 10க்கும் மேற்பட்ேடார் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி நிர்வாகத்திடம் இ-மெயில் மூலமாகவும், புகார் கடிதம் மூலமாகவும் பாலியல் புகார் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

புகார் அளித்த முன்னாள் மற்றும் தற்போது கல்லூரியில் படித்து வரும் மாணவிகள் அனைவரும், முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் தங்களுக்கு அனுப்பிய ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆபாச குறுஞ்செய்திகளை ஆதாரமாக அனுப்பி உள்ளனர். அதில், முன்னாள் மாணவிகள் சிலர், சக மாணவிகளுடன் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் நெருக்கமாக இருந்த வீடியோக்களை அனுப்பி தங்களை ஆசைக்கு இணங்க தொந்தரவு செய்ததாக ஒய்எம்சிஏ நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது முன்னாள் மற்றும் தற்போது பயிற்சி மேற்கொண்டு வரும் மாணவிகளின் புகார்களை ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி நிர்வாக குழுவினர் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாமை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதேநேரம், முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம், மாணவிகளுக்கு அனுப்பிய ஆபாச வீடியோக்கள், ஆபாச குறுஞ்செய்திகள் ஆதாரமாக போலீசாரிடம் சிக்கியுள்ளதால், அடுத்தடுத்த வழக்குகளில் அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில
  • பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது: பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை



  • குமரி ஆபாச பாதிரியார் வழக்கில்விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்



  • சூதாட்டத்தில் ரூ.20 ஆயிரம் இழப்பு; மது வாங்கி தரும்படி கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை: 2 பேர் கைது



  • கத்தியுடன் பைக்கில் சுற்றிய இளைஞர்கள் 2 பேர் கைது



  • வாரிசு இல்லாததால் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தங்கை கைது: மருத்துவமனையில் கவலைக்கிடம்



  • கிருஷ்ணகிரி பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த நகைகளுடன் உல்லாச சுற்றுலா: வாலிபர் கோவாவில் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு



  • காதலிக்க மறுத்த மாணவிக்கு உருட்டுக்கட்டை அடி மாணவர் மீது வழக்குப்பதிவு



  • ஸ்கேட்டிங் சிறுமி பாலியல் பலாத்காரம்: பயிற்சியாளருக்கு வலை



  • கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்



  • மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி பணம் நகை மோசடி: கார் டிரைவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com