இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மருமகள் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சி: அதிமுக பெண் நிர்வாகி கைது

3/13/2023 5:47:06 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம்- கடலூர் ரோடு செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கலிவரதன். இவரது மனைவி ஆண்டாள். விருத்தாசலம் அதிமுக நகர துணை செயலாளராக இருந்து வருகிறார். இவர்களது மகன் முகேஷ்ராஜ். இவரது மனைவி கிருத்திகா (26). இவர்களுக்கு ரிஷிதா(5), ரிஷிகா(1) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முகேஷ்ராஜ் கோவை மாவட்டம் அவிநாசியில் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது மாமியார் ஆண்டாள் மருமகளை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு விருத்தாசலத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆண்டாள் கலந்து கொண்டார். இரவு 10 மணி அளவில் கூட்டம் முடிந்ததும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மருமகளுடன் தகராறு ஏற்பட்டது. பின்னர் நள்ளிரவு 12 மணி அளவில் கிருத்திகா வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆண்டாள் பாத்ரூமிற்கு பயன்படுத்தப்படும் ஆசிட் எடுத்து வந்து கிருத்திகாவின் முகம் மற்றும் இடுப்பு பகுதியில் ஊற்றியுள்ளார். மேலும் கொசு விரட்டி திரவத்தை கிருத்திகாவின் வாயில் ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளார். கிருத்திகாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் விருத்தாசலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் விருத்தாசலம் போலீசார் கிருத்திகாவை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆசிட் ஊற்றியதில் கிருத்திகாவின் முகம், கண்கள், காது, உடல், பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்த நிலையில் வலது கண் பார்வை இழந்து அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் ஆண்டாள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது: பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை



  • குமரி ஆபாச பாதிரியார் வழக்கில்விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்



  • சூதாட்டத்தில் ரூ.20 ஆயிரம் இழப்பு; மது வாங்கி தரும்படி கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை: 2 பேர் கைது



  • கத்தியுடன் பைக்கில் சுற்றிய இளைஞர்கள் 2 பேர் கைது



  • வாரிசு இல்லாததால் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தங்கை கைது: மருத்துவமனையில் கவலைக்கிடம்



  • கிருஷ்ணகிரி பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த நகைகளுடன் உல்லாச சுற்றுலா: வாலிபர் கோவாவில் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு



  • காதலிக்க மறுத்த மாணவிக்கு உருட்டுக்கட்டை அடி மாணவர் மீது வழக்குப்பதிவு



  • ஸ்கேட்டிங் சிறுமி பாலியல் பலாத்காரம்: பயிற்சியாளருக்கு வலை



  • கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்



  • மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி பணம் நகை மோசடி: கார் டிரைவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com