இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கவரிங் நகைகளுக்கு தங்க முலாம் பூசி வங்கியில் அடகு வைத்து மோசடி எஸ்.ஐ. உட்பட 5 பேர் கைது: பெண் தொழிலதிபருக்கு தனிப்படை வலை

3/13/2023 5:49:25 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

காரைக்கால்: தமிழகம் முழுவதும் கவரிங் நகைகளுக்கு தங்க முலாம் பூசி வங்கி, பைனான்ஸ், அடகு கடைகளில் அடகு வைத்து கோடி கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பெண் தொழிலதிபரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்கால் ராஜாத்தி நகரை சேர்ந்தவர் கைலாஷ்(36). இவர் காரைக்காலில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் வந்த மர்மநபர், தன்னிடம் 12 பவுன் செயின் இருப்பதாகவும், அதை அடகு வைத்து பணம் தருமாறு கேட்டார்.

அந்த நபரிடம் நகையை கைலாஷ் வாங்கி சோதனை செய்ததில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தனது சித்தப்பா பாலமுரளியை செல்போனில் தொடர்பு ெகாண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கடைக்கு வந்த பாலமுரளி, நகையை வாங்கி பரிசோதித்தார். அதில் நகை தங்க முலாம் பூசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை பிடித்து காரைக்கால் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் காரைக்கால் சின்னக்கண்ணு செட்டித்தெருவை சேர்ந்த பரசுராம்(45) என்பதும், இந்த போலி நகையை விற்குமாறு திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில்(30) என்பவர் அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து பரசுராம், ரிபாத் காமிலை கைது செய்து விசாரித்தனர். அதில், புதுச்சேரி நிரவி காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெரோம் ஜெசிமென்ட்(40), நேதாஜி நகரை சேர்ந்த தொழிலதிபர் புவனேஸ்வரி(35) மற்றும் ரமேஷ்(45), காரைக்கால் புதுத்துறையை சேர்ந்த முகமது மைதீன் ஆகியோருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. புவனேஸ்வரி, ஜெரோம் ஆகியோர் கோயம்புத்தூரிலிருந்து கவரிங் நகைகளை வாங்கி வந்து தங்க மூலாம் பூசி விற்பனை செய்ததுடன், போலி நகைகளை ரிபாத் காமில், பரசுராமிடம் கொடுத்து காரைக்கால்,

புதுச்சேரி மற்றும் தமிழக மாவட்டங்களில் உள்ள தேசிய மற்றும் தனியார் வங்கிகள், அடகு கடைகளில் வைத்து கோடிக்கணக்கில் பணம் பெற்றதும், இவர்களின் கீழ் மேலும் 10 பேர் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து ஜெரோம் ஜெசிமென்ட், ரமேஷ், முகமது மைதீன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.  பின்னர் 5 பேரையும் போலீசார்  காரைக்கால் முதன்மை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி நேற்றிரவு புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் எஸ்எஸ்பி லோகேஷ்வரன் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைத்து புவனேஸ்வரி மற்றும் 10 பேரை தேடி வருகின்றனர்.

பெண் தொழிலதிபருடன் வசித்த எஸ்ஐ
காரைக்காலில் போலி நகை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எஸ்ஐ ஜெரோம் ஜெசிமென்ட் கடந்த 3 ஆண்டுகளாக புவனேஸ்வரி வீட்டில் தங்கியுள்ளார். இதுகுறித்து போலீசில் ஜெரோம் ஜெசிமென்ட், புவனேஸ்வரி மீது ஜெரோம் ஜெசிமென்டின் மனைவி புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ததுடன் ஜெரோம் ஜெசிமென்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அன்று முதல் புவனேஸ்வரி வீட்டில் தான் ஜெரோம் தங்கி வந்தது தெரியவந்தது.

மேலும் சில
  • பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது: பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை



  • குமரி ஆபாச பாதிரியார் வழக்கில்விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்



  • சூதாட்டத்தில் ரூ.20 ஆயிரம் இழப்பு; மது வாங்கி தரும்படி கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை: 2 பேர் கைது



  • கத்தியுடன் பைக்கில் சுற்றிய இளைஞர்கள் 2 பேர் கைது



  • வாரிசு இல்லாததால் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தங்கை கைது: மருத்துவமனையில் கவலைக்கிடம்



  • கிருஷ்ணகிரி பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த நகைகளுடன் உல்லாச சுற்றுலா: வாலிபர் கோவாவில் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு



  • காதலிக்க மறுத்த மாணவிக்கு உருட்டுக்கட்டை அடி மாணவர் மீது வழக்குப்பதிவு



  • ஸ்கேட்டிங் சிறுமி பாலியல் பலாத்காரம்: பயிற்சியாளருக்கு வலை



  • கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்



  • மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி பணம் நகை மோசடி: கார் டிரைவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com