இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மது பாட்டிலால் குத்தி சிறுவன் கொலை: சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

3/13/2023 6:03:27 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

பெரம்பலூர்: பெரம்பலூரில் மதுபாட்டிலால் சிறுவனை குத்திக்கொலை செய்த  சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை பின்புறம் திருநகரை அடுத்த இந்திராநகர், அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஜூலி. இவர்களது மகன்கள் ரோஹித் ராஜ்(14), பிரவீன்ராஜ்(12), பவுன்ராஜ்(8). கணேசன் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். 10ம் வகுப்பு படித்து வந்த ரோஹித் ராஜ் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தந்தையுடன் பூக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார்.

தற்போது வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 7.15 மணியளவில் இந்திரா நகரில் இருந்து அங்காளம்மன் கோயில் செல்லும் சாலையில் உள்ள சமுதாய கழிவறையில் இருந்து ரோஹித் ராஜ் உடலில் பலத்த வெட்டு காயங்களுடன் தன்னை காப்பாற்றுமாறு ரத்த வெள்ளத்தில் அலறியபடி வெளியே வந்து மெயின் ரோட்டுக்கு ஓடி வந்தார். ஆனால் சிறிது தூரத்திலேயே சாலையில் சரிந்து விழுந்த ரோஹித்  துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தகவலறிந்து வந்த ரோஹித் ராஜின் உறவினர்கள் அவரது உடலை  பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து ரோஹித் ராஜின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சமுதாய கழிவறையில் மதுபாட்டில்கள் நொறுங்கியும், அதனை சுற்றி ரத்த கறையும் இருந்தது. இதனால் மர்ம கும்பல் ரோஹித்ராஜை அழைத்து சென்று மது அருந்தி காலி மது பாட்டில்கள் உள்ளிட்டவையால் குத்தி விட்டு தப்பியிருக்கலாம். இதில் பலத்த காயமடைந்த ரோஹித் ராஜ் உயிரிழந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் போலீசார் ரோஹித்ராஜை அவரது நண்பர்களே சேர்ந்து முன்விரோதம் காரணமாக கொலை செய்திருக்கலாம் என்று  அதே பகுதியை சேர்ந்த 7 பேர் மீது சந்தேகித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்திரா நகரை சேர்ந்த அய்யனார்(21) உள்பட 17, 18 வயதுள்ள 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைதானவர்களுக்கு கஞ்சா பழக்கம் உள்ளதும், கடந்த 2 நாட்களுக்கு முன் சிறுவன் ரோஹித் ராஜை அழைத்து கஞ்சா வாங்கிவரும்படி தொல்லை கொடுத்துள்ளனர்.

அதற்கு அவர் மறுத்ததுடன், போலீசில் கூறுவதாக கூறிவிட்டு வந்துவிட்டார். இதனால் கோபத்தில் இருந்த அவர்கள் நேற்றிரவு சிறுவனை வழிமறித்து கழிவறைக்குள் அழைத்து சென்று மதுபாட்டிலை உடைத்து குத்தி கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் முக்கிய குற்றவாளியான சீனிவாசன் என்பவர் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது: பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை



  • குமரி ஆபாச பாதிரியார் வழக்கில்விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்



  • சூதாட்டத்தில் ரூ.20 ஆயிரம் இழப்பு; மது வாங்கி தரும்படி கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை: 2 பேர் கைது



  • கத்தியுடன் பைக்கில் சுற்றிய இளைஞர்கள் 2 பேர் கைது



  • வாரிசு இல்லாததால் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தங்கை கைது: மருத்துவமனையில் கவலைக்கிடம்



  • கிருஷ்ணகிரி பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த நகைகளுடன் உல்லாச சுற்றுலா: வாலிபர் கோவாவில் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு



  • காதலிக்க மறுத்த மாணவிக்கு உருட்டுக்கட்டை அடி மாணவர் மீது வழக்குப்பதிவு



  • ஸ்கேட்டிங் சிறுமி பாலியல் பலாத்காரம்: பயிற்சியாளருக்கு வலை



  • கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்



  • மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி பணம் நகை மோசடி: கார் டிரைவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com