இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

காதலனால் புரோக்கராக மாறிய இன்ஜினியரிங் மாணவி; சக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம்: போலீசாரிடம் சிக்கியது குறித்து பரபரப்பு பின்னணி

3/15/2023 5:55:31 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

சென்னை: காதலனால் பாலியல் புரோக்கராக மாறிய இன்ஜினியரிங் மாணவி ஒருவர், தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட தனியார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, புதுச்சேரி மாநிலம் சிவராந்தகம்பேட்டையை சேர்ந்த பெண் புரோக்கர் ஒருவர் தனது காதலன் பிரகாஷ் என்பவருடன் இணைந்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் பெண் புரோக்கர் மற்றும் பாலியல் ெதாழிலுக்கு உடந்தையாக இருந்த கீழ்ப்பாக்கம் முதல் தெருவை சேர்ந்த பிரேம்தாஸ்(30) என்பவரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பெங்களூரு, மும்பை, தர்மபுரியை சேர்ந்த 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். முக்கிய குற்றவாளியான பெண் புரோக்கரின் காதலன் பிரகாஷை போலீசார் தேடி வருகின்றனர். பின்னர் கைது செய்யப்பட்ட இளம் பெண் புரோக்கரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் வெளியானது.
பெண் புரோக்கரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: பாலியல் வழக்கில் கைதான ெபண் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 12ம் வகுப்பு படிக்கும் போது, பேஸ்புக் மூலம் சென்னையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அறிமுகமானார்.

இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி ஒன்றில் நேரடியாக சந்தித்துள்ளனர். இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக சுற்றி வந்துள்ளனர். பின்னர் பிரகாஷ் ஆலோசனைப்படி இளம் பெண் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் இன்ஜினியரிங் 3ம் ஆண்டு தற்போது படித்து வருகிறார். பிரகாஷ் சிறு வயதில் இருந்து பாலியல் புரோக்கர்களுக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். இதனால் தனது காதலியான கல்லூரி மாணவி மூலம் கடந்த 2 ஆண்டுகளாக தனியாக பாலியல் தொழில் செய்து வருகிறார். தனது காதலனுக்கு உதவியாக கல்லூரி மாணவியும் தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுக்கு கடனாக பணத்தை கொடுத்து அதன் மூலம் பண ஆசையை மாணவிகளுக்கு காட்டி பாலியல் தொழிலுக்கு அவர்களை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியுள்ளார்.

அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பலர் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி அதன் மூலம் லட்சக்கணக்கான பணத்தை அவர் தனது காதலன் மூலம் சம்பாதித்துள்ளார். கல்லூரி மாணவிகளை கேட்கும் தனது வாடிக்கையாளர்களிடம் ஒரு இரவுக்கு ரூ.25 ஆயிரம் மூலம் ரூ.30 ஆயிரம் வரை பணம் வசூலித்துள்ளார். பிறகு பாலியல் ெதாழிலுக்கு வரும் மாணவிகளுக்கு ஒரு இரவுக்கு வெறும் ரூ.3 ஆயிரம் மட்டும் கொடுத்துவிட்டு, மீதி பணத்தை இவர்கள் சம்பாதித்து வந்துள்ளனர். பாலியல் புரோக்கர் பிரகாஷ் வாடிக்கையாளர்களிடம் வாங்கும் பணம் எல்லாம் தனது காதலியான கல்லூரி மாணவியின் ‘ஜிபே’ மூலமே பெற்றுள்ளார். அதற்கான அனைத்து ஆதாரங்களும் கல்லூரி மாணவியின் செல்போனில் இருந்து பெறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு மாதத்திற்கு சரசரியாக ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை இருவரும் சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், கல்லூரி மாணவி தனது காதலனுடன் சென்னை, புதுச்சேரி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக யாருக்கும் எந்த சந்தேகமும் வராதபடி பாலியல் தொழில் செய்து வந்துள்ளது விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. கைதான பெண் கல்லூரி மாணவி என்பதால், அவரை உடனே கைது செய்யாமல் பல நாட்கள் நோட்டமிட்டு பாலியல் புரோக்கர் என உறுதி செய்த பிறகே கைது செய்துள்ளோம். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள காதலன் பிரகாஷை கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு பாதிக்கப்பட்ட மாணவிகளை ரகசியமாக அழைத்து அவர்களுக்கு மனதத்துவ நிபுணர்கள் மூலம் உரிய ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் சில
  • பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது: பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை



  • குமரி ஆபாச பாதிரியார் வழக்கில்விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்



  • சூதாட்டத்தில் ரூ.20 ஆயிரம் இழப்பு; மது வாங்கி தரும்படி கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை: 2 பேர் கைது



  • கத்தியுடன் பைக்கில் சுற்றிய இளைஞர்கள் 2 பேர் கைது



  • வாரிசு இல்லாததால் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தங்கை கைது: மருத்துவமனையில் கவலைக்கிடம்



  • கிருஷ்ணகிரி பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த நகைகளுடன் உல்லாச சுற்றுலா: வாலிபர் கோவாவில் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு



  • காதலிக்க மறுத்த மாணவிக்கு உருட்டுக்கட்டை அடி மாணவர் மீது வழக்குப்பதிவு



  • ஸ்கேட்டிங் சிறுமி பாலியல் பலாத்காரம்: பயிற்சியாளருக்கு வலை



  • கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்



  • மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி பணம் நகை மோசடி: கார் டிரைவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com