இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஆட்டோவில் கடத்தி சென்று சிறுமி கூட்டு பலாத்காரம்: 2 கொடூரன்கள் கைது

3/16/2023 5:20:56 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

தென்காசி: தென்காசியில் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தென்காசி அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் இரவு செங்கோட்டை போலீஸ் நிலையம் அருகே செல்போன் கடை ஒன்றில் தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக கொடுத்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த மூன்று பேர் ஆட்டோவில் ஏறுமாறும், வீட்டில் இறக்கி விடுவதாகவும் கூறியுள்ளனர்.

இதனை நம்பி சிறுமி ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆனால், அந்த ஆட்டோ அவரது சொந்த ஊருக்கு செல்லவில்லை. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி, இது குறித்து அவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது அவரது வாயில் துணியை அழுத்தி கட்டி சிறுமியை கடத்தி சென்றனர். தொடர்ந்து, தென்காசி முக்கூடல் உப மின் நிலையம் அருகில் உள்ள மறைவான இடத்திற்கு சிறுமியை கொண்டு சென்ற மூவரும் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் தென்காசி-செங்கோட்டை சாலை சீவலப்பேரி குளம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு தப்பி சென்றனர்.

அப்போது அங்கு வலி தாங்க முடியாமல் மிகவும் களைப்புடன் வந்த சிறுமியை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விசாரித்தனர். அப்போது, மூன்று பேர் சேர்ந்து கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘தென்காசி கீழ வாலிபன் பொத்தையைச் சேர்ந்த தங்கத்துரை மகன் ராஜி என்ற அந்தோணி (20), தைக்கா தெருவை சேர்ந்த சுடலை முத்து மகன் மாதவன் (33), வெங்கடேஷ் (34) ஆகிய மூவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தென்காசி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜி மற்றும் மாதவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். வெங்கடேசை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது: பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை



  • குமரி ஆபாச பாதிரியார் வழக்கில்விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்



  • சூதாட்டத்தில் ரூ.20 ஆயிரம் இழப்பு; மது வாங்கி தரும்படி கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை: 2 பேர் கைது



  • கத்தியுடன் பைக்கில் சுற்றிய இளைஞர்கள் 2 பேர் கைது



  • வாரிசு இல்லாததால் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தங்கை கைது: மருத்துவமனையில் கவலைக்கிடம்



  • கிருஷ்ணகிரி பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த நகைகளுடன் உல்லாச சுற்றுலா: வாலிபர் கோவாவில் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு



  • காதலிக்க மறுத்த மாணவிக்கு உருட்டுக்கட்டை அடி மாணவர் மீது வழக்குப்பதிவு



  • ஸ்கேட்டிங் சிறுமி பாலியல் பலாத்காரம்: பயிற்சியாளருக்கு வலை



  • கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்



  • மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி பணம் நகை மோசடி: கார் டிரைவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com