இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ரூ.100 கோடி லோன் தருவதாக மும்பை தொழிலதிபரிடம் ரூ.4 கோடி மோசடி செய்த 3 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

3/16/2023 5:50:35 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

சென்னை: ரூ.100 கோடி லோன் தருவதாக மும்பை தொழிலதிபரிடம் ரூ.4 கோடி மோசடி செய்த 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஷியாமல் சட்டர்ஜி அளித்த புகாரில், ‘நான் நாக்பூரில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறேன். எனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய பணம் தேவைப்பட்டது. இதனால் தரகர்கள் மூலம் சென்னை ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா காலனியில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றை தொடர்பு கொண்டேன். அதன் இயக்குநர்களான பன்னீர்செல்வம், இம்தியாஷ் அகமது, பவன்குமார் ஆகியோர், தங்களது நிறுவனத்தின் மூலம் ரூ.100 கோடி கடன் தருவதாக உறுதி அளித்தனர்.

கடன் தொகைக்காக 6 மாத வட்டியாக முன்தொகை ரூ.4 கோடி தர வேண்டும் என்று கூறினர். எனக்கு ரூ.100 கோடி கடன் தொகை வந்து விடும் என்பதால் அவர்கள் கேட்ட பணத்தை அவர்களின் நிறுவனத்தின் வங்கி கணக்கு மூலம் ரூ.3.50 கோடியும், மீதமுள்ள ரூ.50 லட்சம் பணத்தை நேரிலும் கொடுத்தேன். ஆனால் சொன்னபடி அவர்கள் எனக்கு கடன் தரவில்லை. பல முறை போன் செய்தும் அவர்கள் எடுக்கவில்லை. பிறகு நேரடியாக அவர்களின் அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது, அவர்கள் நடத்திய அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. எனவே, எனக்கு லோன் வாங்கி தருவதாக ரூ.4 கோடி மோசடி செய்த 3 பேரை கைது செய்து பணத்தை மீட்டு தர வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தினார். அப்போது, ஈஞ்சம்பாக்கத்தில் போலியான பெயரில் தனியார் நிறுவனம் நடத்துவது போல் பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து, கடன் கேட்டு வந்த ஷியாமல் சட்டர்ஜியை ஏமாற்றியது தெரியவந்தது. அதைதொடர்ந்து தலைமறைவாக இருந்த 3 பேரை தனிப்படை போலீசார் உதவியுடன் தீவிரமாக தேடி வந்த நிலையில், கோவளம் அருகே உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீசார் நேற்று கோவளத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்று மும்பை தொழிலதிபரிடம் ரூ.4 கோடி மோசடி செய்த பன்னீர்செல்வம்(43), இம்தியாஷ் அகமது(எ)சதீஷ்குமார்(37), பவன்குமார்(எ)ரவி(எ)நியமத்துல்லா(45) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் தொழிலதிபரிடம் வாங்கிய பணம் குறித்து விசாரணை நடத்திய போது, பணத்தில் பெரும் பகுதியை சொகுசு வாழ்க்கைக்கு செலவு செய்ததாகவும், தொழிலதிபர்களை நம்ப வைக்க ஆடம்பரமாக செலவு செய்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் சில
  • பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது: பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை



  • குமரி ஆபாச பாதிரியார் வழக்கில்விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்



  • சூதாட்டத்தில் ரூ.20 ஆயிரம் இழப்பு; மது வாங்கி தரும்படி கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை: 2 பேர் கைது



  • கத்தியுடன் பைக்கில் சுற்றிய இளைஞர்கள் 2 பேர் கைது



  • வாரிசு இல்லாததால் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தங்கை கைது: மருத்துவமனையில் கவலைக்கிடம்



  • கிருஷ்ணகிரி பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த நகைகளுடன் உல்லாச சுற்றுலா: வாலிபர் கோவாவில் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு



  • காதலிக்க மறுத்த மாணவிக்கு உருட்டுக்கட்டை அடி மாணவர் மீது வழக்குப்பதிவு



  • ஸ்கேட்டிங் சிறுமி பாலியல் பலாத்காரம்: பயிற்சியாளருக்கு வலை



  • கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்



  • மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி பணம் நகை மோசடி: கார் டிரைவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com