இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கோழி பண்ணைக்கு கடத்தமுயன்ற 2,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஊழியர் உள்பட 2 பேர் கைது

3/16/2023 5:52:47 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

திருவள்ளூர்: திருவள்ளூரில் இருந்து கோழி பண்ணைக்கு கடத்த முயன்ற 2 டன் 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்கும் பொருட்டு, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை, கூடுதல் காவல்துறை இயக்குநர்  அருண் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், எஸ்பி கீதா, டிஎஸ்பி நாகராஜன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் போலீசார் ஆவடி அடுத்த கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடி பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை நடத்தி டிரைவரிடம் விசாரித்தனர். இதில் அவர் ஆவடி, சிரஞ்சீவி நகரை சேர்ந்த கார்த்திக் (36) என தெரியவந்தது. இதையடுத்து வேனில் இருந்து 50 கிலோ எடை கொண்ட 53 மூட்டைகளில் 2 டன் 650 கிலோ புழுங்கல் அரிசியும் 50 கிலோ எடைகொண்ட 1 மூட்டை பச்சை அரிசியும் என மொத்தம் 2 டன் 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இந்த ரேஷன் அரிசியை கள்ளக்குறிச்சியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு கடத்த செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை பறிமுதல் செய்தனர்.

அரிசி கடத்தலில் ஈடுபட்ட கார்த்திக் என்பவர் மீதும் ரேஷன் அரிசியை திருநின்றவூர், பிரகாஷ் நகர் ரேஷன் கடையில் பதுக்கி வைத்து வேனில் ஏற்றி அனுப்பி வைத்த ரேஷன் கடை விற்பனையாளர் திருநின்றவூரை சேர்ந்த சரவணன் (34), அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வாகன உரிமையாளர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சதீஷ், அரிசி கடத்தலில் ஈடுபட்ட செங்குன்றத்தை சேர்ந்த ஹரி ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். வேன் டிரைவர் கார்த்திக் , விற்பனையாளர் சரவணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து பறிமுதல்  செய்யப்பட்ட 2 டன் 700 கிலோ ரேஷன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும் சில
  • பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது: பெருங்குடியில் வக்கீல் படுகொலை: பிரபல ரவுடி சி.டி.மணியிடம் போலீசார் தீவிர விசாரணை



  • குமரி ஆபாச பாதிரியார் வழக்கில்விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்



  • சூதாட்டத்தில் ரூ.20 ஆயிரம் இழப்பு; மது வாங்கி தரும்படி கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை: 2 பேர் கைது



  • கத்தியுடன் பைக்கில் சுற்றிய இளைஞர்கள் 2 பேர் கைது



  • வாரிசு இல்லாததால் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தங்கை கைது: மருத்துவமனையில் கவலைக்கிடம்



  • கிருஷ்ணகிரி பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த நகைகளுடன் உல்லாச சுற்றுலா: வாலிபர் கோவாவில் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு



  • காதலிக்க மறுத்த மாணவிக்கு உருட்டுக்கட்டை அடி மாணவர் மீது வழக்குப்பதிவு



  • ஸ்கேட்டிங் சிறுமி பாலியல் பலாத்காரம்: பயிற்சியாளருக்கு வலை



  • கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கைதான முதியவர் பரபரப்பு வாக்குமூலம்



  • மூதாட்டியை ஏமாற்றி ரூ.5 கோடி பணம் நகை மோசடி: கார் டிரைவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com