இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

4 ஆண்டில் பீகார், மகாராஷ்டிரா, பஞ்சாப் அரசியலில் திருப்பம் ஓட்டம் பிடித்த கூட்டணி கட்சிகளை இழுக்கும் பாஜக: 2024 மக்களவை தேர்தலுக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியது

3/21/2023 5:56:15 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

புதுடெல்லி: கடந்த 4 ஆண்டில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளை மீண்டும் கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை பாஜக தலைமை முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக பீகார், மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.  கடந்த 2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில் 303 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, தனிப்பெரும்பான்மை பலத்துடன் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை அமைத்தது. பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டிருந்தாலும், கடந்த 4 ஆண்டில் 3 கூட்டணி கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. அந்தவகையில் பீகாரில் லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்), ஐக்கிய ஜனதா தளம்  (பீகார் முதல்வர் நிதிஷ்குமார்), கோவாவில் விஜய் சர்தேசாயின் கோவா  பார்வர்டு கட்சி, மேற்குவங்கத்தில் கூர்க்காலாந்து கோரும் கூர்க்கா  ஜனமுக்தி மோர்ச்சா, ராஜஸ்தானின் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி, பஞ்சாபில்  சிரோமணி அகாலி தளம், மகாராஷ்டிராவில் சிவசேனா (உத்தவ் அணி) போன்ற கட்சிகளை குறிப்பிட  முடியும்.

மகாராஷ்டிராவில் சிவசேனாவும் பாஜகவும் மக்களவை தேர்தலில் இணைந்து  போட்டியிட்டு 48 இடங்களில் 41 இடங்களைக் கைப்பற்றின. ஆனால் கடந்த  ஓராண்டிற்கு முன் மகாராஷ்டிராவில் நடந்த சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு  கவிழ்க்கப்பட்டது. சிவசேனா இரண்டாக உடைந்தது. தற்ேபாது பாஜகவுடன் இணைந்து  சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில்  கடந்த 2019 தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து  தேர்தலில் போட்டியிட்டது. ராம்விலாஸ் பஸ்வானின் மறைவுக்குப் பிறகு, அவரது  மகனான சிராக் பஸ்வான் 2020ல் நடந்த தேர்தலின் போது தேசிய ஜனநாயகக்  கூட்டணியில் இருந்து விலகி பீகார் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார்.  

அதன்பின்னர் சிராக் பஸ்வானுக்கும், அவரது மாமா பசுபதி பராஸூக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பசுபதி பராஸ், தனது ஆதரவு  எம்பிக்களுடன் இணைந்து தனி பிரிவாக செயல்பட்டு வருகிறார். மேலும் அந்த  எம்பிக்கள் பாஜகவை ஆதரித்து வருகின்றனர். அதேபோல் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக - லோக்ஜன சக்தி கூட்டணி மொத்தமுள்ள 40 தொகுதியில் 39 தொகுதியை கைப்பற்றியது. தற்போது இரு கட்சிகளும் பாஜகவில் இருந்து வெளியேறியதால், பீகாரில் பாஜகவின் நிலைமை மோசமாகிவிட்டது. பஞ்சாப்பில் கடந்த 2019 தேர்தலில் பாஜகவுடன்  கூட்டணி வைத்திருந்த சிரோமணி அகாலிதளம் (இரு கட்சிகளும் தலா 2 இடங்களில் வெற்றி), 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில்  தனித்து போட்டியிட்டது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் வரும் 2024 லோக்சபா தேர்தலில், ஒத்த கருத்துடைய மாநில கட்சிகளை கொண்டு கூட்டணி அமைக்க பாஜக வியூகங்களை வகுத்து வருகிறது. மேலும் ஏற்கனவே கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை பாஜக தலைமை தொடங்கியுள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து, 2024 தேர்தலை எதிர்கொள்வோம். பீகாரில் லோக் ஜனசக்தி, பஞ்சாப்பில் சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவில் இருந்து வெளியேறிவிட்டன. அந்த கட்சிகளுடன் சேர்த்து மேலும் சில கட்சிகளை கூட்டணியில் இழுக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் போது ெவற்றிப் பெற்ற இடங்களை மீண்டும் கைப்பற்ற புதிய யுக்திகள் கையாளப்படுகிறது. மற்ற மாநிலங்களில் பாஜகவுடன் ஒத்துபோகும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

மேலும் சில
  • அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்



  • மதுரையில் கூடுதல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • ஓட்டேரியில் திமுக சார்பில் பட்டிமன்றம் முதல்வர் தோளில் பொறுப்பை சுமக்கும் காரணத்தால் பொற்காலமாக திகழ்கிறது: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு



  • கூடுவாஞ்சேரியில் பிரதான சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்



  • நடுரோட்டில் தீப்பிடித்து நாசமான கார்: 2 பேர் படுகாயம்



  • மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று புதிய பெயர்: முதல்வர் திறந்து வைத்தார்



  • உடல்நலக் குறைவால் நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியன் இன்று அதிகாலை காலமானார்.



  • சென்னை விமானநிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் 8 ஆக அதிகரிப்பு



  • சென்னை விமான நிலையத்தில் புதிய முனைய திறப்பு விழா தள்ளி வைப்பு



  • ‘‘என் கணவரை துடிதுடிக்க கொன்ற அனைவரையும் தூக்கில் போடுங்கள்’’: ஜெகன் மனைவி கண்ணீர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com