இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பள்ளி ஆசிரியை கொலை கணவனுக்கு போலீஸ் வலை

3/22/2023 5:43:03 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் பள்ளி ஆசிரியையை கொலை செய்து உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள காஞ்சியார் பகுதியை சேர்ந்தவர் விஜேஷ். அவரது மனைவி அனு மோள் (27). அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 17ம் தேதி வழக்கம் போல் அனு மோள் பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பினார். ஆனால் மறுநாள் முதல் அவர் பள்ளிக்கு செல்லவில்லை. இதுகுறித்து அனு மோளின் பெற்றோருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து விஜேஷை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அனு மோள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டதாக கூறி உள்ளார்.

இதனால் அனு மோளின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே கட்டப்பனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே நேற்று அனு மோளின் தம்பி அலெக்ஸ் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்தவர் கதவை உடைத்து திறந்து பார்த்தார். அப்போது படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் ஒரு கம்பளி போர்வையில் அனு மோளின் உடல் சுற்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக கட்டப்பனை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து அனு மோளின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறிந்ததும் விஜேஷ் தலைமறைவானார். விஜேஷ் தான் மனைவியை கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். ஆகவே அவரை பல்வேறு இடங்களிலும் தீவிரமாக  தேடி வருகின்றனர்.


மேலும் சில
  • அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்



  • மதுரையில் கூடுதல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • ஓட்டேரியில் திமுக சார்பில் பட்டிமன்றம் முதல்வர் தோளில் பொறுப்பை சுமக்கும் காரணத்தால் பொற்காலமாக திகழ்கிறது: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு



  • கூடுவாஞ்சேரியில் பிரதான சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்



  • நடுரோட்டில் தீப்பிடித்து நாசமான கார்: 2 பேர் படுகாயம்



  • மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று புதிய பெயர்: முதல்வர் திறந்து வைத்தார்



  • உடல்நலக் குறைவால் நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியன் இன்று அதிகாலை காலமானார்.



  • சென்னை விமானநிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் 8 ஆக அதிகரிப்பு



  • சென்னை விமான நிலையத்தில் புதிய முனைய திறப்பு விழா தள்ளி வைப்பு



  • ‘‘என் கணவரை துடிதுடிக்க கொன்ற அனைவரையும் தூக்கில் போடுங்கள்’’: ஜெகன் மனைவி கண்ணீர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com