இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நீரில்லையேல் உயிர் இல்லை என்பதை உணர்ந்து தண்ணீரை காப்போம்: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு

3/22/2023 5:43:57 PM
காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு திருப்புவனம், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஓபிஎஸ்ஸை கண்டித்து சுவரொட்டிகள்

சென்னை: நீரில்லையேல் உயிர் இல்லை என்பதை உணர்ந்து தண்ணீரை காப்போம் என உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் அவர் பேசியிருப்பதாவது: உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு முக்கியமானது தண்ணீர். இந்த பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம் தண்ணீர். உலகம் எந்த அளவிற்கு உயர்ந்தாலும் மாறினாலும், மாறுதலை அடைந்தாலும் தண்ணீரின் தேவை மாறாது. அதனால்தான் நீரின்றி அமையாது உலகு என்றார் ஐயன் திருவள்ளுவர்.

தமிழ் நிலமானது தண்ணீரை தனது பண்பாட்டுடன் சேர்த்து வளர்த்து வந்துள்ளது. தண்ணீர் என்று சொல்லாமல் அமிழ்தம் என்று சொன்னவர் திருவள்ளுவர்.மனித உடலில் நீரின் அளவு கூடினாலும் குறைந்தாலும் நோய் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார் வள்ளுவர். திருமந்திரமும், தேவாரமும், திருவாசகமும் தண்ணீரின் அவசியத்தை அழகு தமிழில் கூறியுள்ளது. நீர் நிலைகளின் அளவை குறித்து குளம், குட்டை, ஏரி, நீரோடை, ஆறு, அருவி, கடல் என்று பிரித்து பெயர் வைத்தவர்கள் தமிழர்கள். எல்லாமே நீர் உள்ள இடம்தான் என்றாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டது. நீரின் தன்மைக்கேற்ப பெயர் சூட்டிய இனம் தமிழ் இனம். தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்று சொல்வார்கள்.

நமது உடலின் அனைத்து உறுப்புகளும் சரியாக செயல்படுவதற்கு தண்ணீர் மிக மிக அவசியம். உணவின்றி கூட பல நாட்கள் வாழ்ந்து விடலாம் தண்ணீர் இன்றி வாழ முடியாது. இத்தகைய உயிர் நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும். நம்மை காக்கும் தண்ணீரை வீணாக்கக் கூடாது. தண்ணீரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், தூய்மையாக வைத்திருக்க வேண்டும், மாசுபடாமல் காக்க வேண்டும். நீர் நிலைகளை தூர்வாரி வைத்திருக்க வேண்டும். இன்றைக்கு ஒரு நாட்டின் வளம் என்பது நீர் வளமாக, இயற்கை வளமாக கணக்கிடப்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். புவி வெப்பமயமாதலில் இருந்து காப்பது தண்ணீர்தான். நீரில்லையேல் உயிர் இல்லை என்பதை உணர்ந்து தண்ணீரை காப்போம்.. தாய் நிலத்தை காப்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோவில் பேசியுள்ளார்.

மேலும் சில
  • அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டல் எதிரொலி; அண்ணாமலைக்கு அமித்ஷா கடும் டோஸ்: கூட்டணி குறித்து மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி அடித்தார்



  • மதுரையில் கூடுதல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • ஓட்டேரியில் திமுக சார்பில் பட்டிமன்றம் முதல்வர் தோளில் பொறுப்பை சுமக்கும் காரணத்தால் பொற்காலமாக திகழ்கிறது: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு



  • கூடுவாஞ்சேரியில் பிரதான சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்



  • நடுரோட்டில் தீப்பிடித்து நாசமான கார்: 2 பேர் படுகாயம்



  • மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் சாலை என்று புதிய பெயர்: முதல்வர் திறந்து வைத்தார்



  • உடல்நலக் குறைவால் நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியன் இன்று அதிகாலை காலமானார்.



  • சென்னை விமானநிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் 8 ஆக அதிகரிப்பு



  • சென்னை விமான நிலையத்தில் புதிய முனைய திறப்பு விழா தள்ளி வைப்பு



  • ‘‘என் கணவரை துடிதுடிக்க கொன்ற அனைவரையும் தூக்கில் போடுங்கள்’’: ஜெகன் மனைவி கண்ணீர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com